Tuesday 12 February 2013

என்ன வருத்தம் கண்ணே உனக்கு


இப்பவே என்ன தாயி வருத்தம் ஒனக்கு? .உன் எதிர் காலம் பற்றியா, பள்ளியில் வாத்தியார் அடித்தாரா, நீ கேட்ட மிட்டாயை அம்மா வங்கித்தரவில்லையா ,இல்லை உன் தாய் உன் தந்தையிடம் படும் அவஸ்தைகளை நினைத்தா, நீ கொடுக்க வேண்டிய வரதட்சனையை நினைத்தா, உனக்கு தங்கையாக இருக்கவேண்டிய சிசுவை இன்னொரு பெண் வேண்டாம் என்று சொல்லி கலைக்கவைத்த தாத்தாப் பற்றியா?...
”இல்லை பெண்ணாக பிறந்துவிட்டோமே சோகப்பட்டு பழக்கிக்கொள்வோம் ,வருங்காலத்துக்கு உதவும் என்று தான்”..(இதையெல்லாம் பற்றி நமக்கென்ன கவலை, நான் சுதந்திரம் கொண்டாடிக்கொண்டே, ஒலிம்பிக் பார்ப்போம்)...
பொறுமையாக இருந்தது போதும் கண்ணே, இது அனைத்துக்கும் காரணம் இந்த சமூகம் தான். படி நிறைய படி....... கொத்தடிமையாக இன்னொருவரிடம் வேலை செய்ய தான் உனக்கு பள்ளியில் சொல்லித்தருகிறார்கள், அதையும் தாண்டி படி. வரலாறு படி, அசோகர் பற்றி மட்டுமல்ல , இந்த சமூகமே தாய்வழிச்சமூகம் என்று கூறும் அளவுக்கு ஒரு காலத்தில் பெண்ணின் நிலை இருந்தது என்று உணர்.விஞ்ஞானம் படி, நம் உடம்பில் சுரப்பியினால் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் என்று தெரிந்துகொள். அறிவியல் படி , சமூகம் சொல்லிக்கொண்டிருக்கும் விதிமுறைகள் அனைத்தும் பெண்ணை அடிமைப்படித்தும் ஆணாதிக்க சிந்தனை தான் என்றுணர்..
இந்த போலி சமூகத்தை விட்டு வெளியே வா. பெரியார் கண்ட சமூக மாற்றம் வரவேண்டும் என்றால் அது உன்போன்ற பெண்ணால் முடியும்...சீக்கிரம் வா

No comments:

Post a Comment

THANK YOU