Friday 15 February 2013

என்ன வாழ்க்கை இது?

முன்பெல்லாம் மனிதன்,மாடு ,நாய்,கொக்கு எல்லோருக்கும் வாழ்க்கை அதிக பட்சம் நாற்பது ஆண்டுகள் தான் இருந்தது.மாடு,நாய்,கொக்கு மூன்றும் இறைவனிடத்தில் தங்கள் ஆயுட்காலத்தை இருபது ஆண்டுகள் குறைக்கும்படி கேட்டுக் கொண்டன.உடனே மனிதன் ஆண்டவனிடம் அவை மூன்றும் விட்ட  அறுபது ஆண்டுகளையும் தனக்கு ஆயுட்காலத்தில் நீட்டித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டான்.இறைவனும் சம்மதித்து  விட்டான்.எனவே மனிதனுக்கு ஆயுட்காலம் நூறாகியது.ஆனாலும் அவனுடைய உரிமையான நாற்பது ஆண்டுகள்தான் அவன் மனித வாழ்க்கை வாழ்கிறான்.அதிலும் போட்டி பொறாமைகளுடன்!
நாற்பதிலிருந்த அறுபது வரை மாட்டிடம் இருந்து இரவல் பெற்ற இருபது ஆண்டுகள்.அப்போது மனிதன் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வாழ்க்கைப் பாரத்தை மாடுபோல இழுக்கிறான்.அறுபதிலிருந்து எண்பது வரை நாயிடமிருந்து இரவல் பெற்றது.எனவே அந்த காலகட்டம் நாய் வாழ்க்கை வாழ்கிறான்.அதிலும் சிலருக்குத் தெரு நாய் வாழ்க்கை!  எண்பதிலிருந்து  நூறு வரை கொக்கின் கடன்.அப்போது மனிதன் கொக்கு வாழ்க்கை வாழ்கிறான்.ஒற்றைக்காலில் அந்த' மரணம் 'என்கிற மீனுக்காகத் தவம் இருக்கிறான்.என்ன வாழ்க்கை இது?


No comments:

Post a Comment

THANK YOU