Wednesday 27 February 2013

கலிலியோ பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் !!!



கலிலியோ...இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15ம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து, சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுவாரஸியமான தகவல்கள் இதோ...




பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான், பின்னாளில் வந்த இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது.



இத்தாலியிலுள்ள பைசா நகர பல்கலைக் கழகத்தில் கலிலியோவுக்கு கணித பேராசிரியராக வேலை கிடைத்தது. ஆனால் தனது ஆராய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால், அவர பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கி விட்டனர்.




கண்ணாடி பிம்பம் -மெழுகுவர்த்தி மூலம் ஒலியைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம், பாக்கெட்டில் வைக்கும் சீப்பு, ரீஃபில் பேனா போன்ற கண்டுபிடிப்புகளுக்கு கலிலியோவின் ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.





தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வாட்டிக்கான் சிட்டி கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ, 1633ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தவிடப்பட்டார். 1638ம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு, பார்வை இழந்தார். 1642ம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.





கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.



தோல்வியின் மூலம் வெற்றி !!!


தோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம்.
தோல்வியின் மூலம் வெற்றியைய் பதித்தவர்கள்:

கணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை அந்த தோல்வி தடைசெய்ய வில்லை.

சிக்காகோவில் மார்ஷல் என்பவரின் கடை தீக்கிரையாகி விட்டது. கடை எரிந்த மறுநாளே “இதைவிடப் பெரிய கடையாக இதே இடத்தில் திறப்பேன்” என்று கூறினார். மனிதர் இரண்டாடுகளில் மிகப்பெரிய கட்டிடம் எழுப்பினார் அதே இடத்தில்.

நாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து “பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.




ஆகவே நாம் பெறும் தோல்விகளே நமது வாழ்வின் வெற்றிப் படிகளாக அமைகின்றன. தோல்வி என்பது ஏதோ தாழ்வு என்று கருத வேண்டாம். அதுவே பின்நாளில் வெற்றி அடைவதற்கான வழி என்றே கொள்வோம், வெற்றி பெறுவோம்!!!


                                  நம் எல்லோருடைய வாழ்விலும்!.

திப்பு சுல்தான்


 

200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திப்பு சுல்தானின் வரலாற்றை நாம் படிக்க வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவன் அவன். ஆங்கிலேயருக்கு அடிமையாகி இருந்தால் தென்னகப் பகுதிகளுக்கே அவன் பெரிய மன்னராக ஆகியிருப்பான். 1782 - ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான் மன்னர்களிடமிருந்து தானமாக நிலங்களை பெற்று வைத்திருந்த ஜமீன்தார்களிடமிருந்து நிலங்களை மீட்டு அதை ஏழை தலித் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்து 200 ஆண்டுகளுக்கு முன்பே நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தியவன்.


அதனால்தான் பிராமணர்களும் ஆங்கிலேயர்களும் திப்பு சுல்தானை துரோகியைப் போன்று திரித்து தவறான வரலாற்றை எழுதியுள்ளனர். உண்மையான வரலாற்றை நாம்தான் வெளிக் கொணர வேண்டும்.


1782 முதல் 1799 வரை ஆட்சி புரிந்த திப்பு தான் அரசன் இல்லை: மக்கள் பிரதிநிதி என்று கூறிக் கொண்டவன்.


தவறு செய்பவர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு மாற்றுப் பணிகளை வழங்கி அதை வருமானமாக மாற்றியவன் திப்பு.


இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட திப்பு மற்றவர்களைப் போல ஆடம்பரத்தை விரும்பாமல் மக்கள் நலனையும் ஆங்கிலேயரை விரட்டி அடிப்பதையும் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.


மேலும் கடைசி 6 மணி நேரத்துக்கு முன் எதிரிகள் படையெடுத்து வருவதையறிந்து அவர்களை எதிர் கொள்ள தன் படைகளை தயார் படுத்தினான் திப்பு. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு வசதிகளையும் அவன் வைத்திருந்தான்.


திப்பு சுல்தான் இறந்த பின் அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் முதலில் திப்புவின் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரசீக மற்றும் சமஸ்கிரத மொழி நூல்களை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். பின் அந்த நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டன.


அதன் பின்னரே விலை உயர்ந்த நகைகள் ஆபரணங்களை அவர்கள் அள்ளிச் சென்றனர்.


திப்புவின் அறிவும் செல்வமுமே இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்கு காரணம்.


ஆங்கிலேயர்களை எதிர்க்க ஹைதரபாத் நிஜாம், மராட்டிய மன்னர்களை ஒன்றிணைக்க திப்பு மேற்கொண்ட முயற்ச்சிக்கு இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இணைப்பு நடைபெற்றிருந்தால் 1799- ஆம் ஆண்டே நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும்.


நம்நாடு முன்னேற கணிணி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை மட்டும் துணை புரியாது. ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும்.


அமெரிக்கர்கள் நம் நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவதை விரும்பவில்லை. மென்பொருள் பொறியாளர்கள்தான் உருவாக வேண்டுமென விரும்புகின்றனர். நம் இளைஞர்கள் விஞ்ஞானிகளாக உருவாக அடிப்படை அறிவியலை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.


திப்புவின் அறிவுத் திறன், தொழில் நுட்பம், நிர்வாகத் திறன் ஆகியவற்றை நாம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.'

Sunday 24 February 2013

birds name all kinds of birds

BIRD BYTES BIRD NAMES

Pet Parrot Information and Bird Names
Hi, my name is Gypsy. What's yours?



Home PageParrot TalesBird PhotosLicense to BragBird CollectiblesBird Names

Parrot T-ShirtsPet ArtPet MagazinesPet CalendarsThe Perch EzineSubscribe

Bird BooksBird PoemsBird LinksTell Your Friends

Shop for Birds Only


There are a million different, very unique, names out there for pet birds. Here's your chance to list your bird's name and view the multitude of other names sent in by other bird lovers like you. It's an excellent reference guide to use for your next bird addition. (You may not be planning on it, but just in case.)
Updates to list will appear periodically so come visit as often as you wish.
To submit your pet bird's name send via E-Mail to:


email your bird names to bird bytes! goldie_web@yahoo.com


GIFT IDEAS FOR EVERYBIRDIE!
Guide to Companion Parrot Behavior
Guide to
Companion Parrot Behavior

Parrot Charms


GREAT GIFT IDEA!

BATH TIME
BIRD MISTER!
Drs. Foster and Smith Inc.
Pet Bird Supplies
Win Shop Bird Bytes
Subscribe to our Newsletter
for a Chance to Win!


parrot names, submit your bird names                        Page 1  | Page 2  | Page 3  | Page 4 |  Page 5  | Page 6 |  Page 7 |  Page 8 | Page 9 |  Page 10 |
  Page 11 | Page 12 | Page 13 | Page 14 | Page 15 |  Page 16 | Page 17 | Page 18 | Page 19

Chantilly Pepe Lester Pete Baby











Send this site to a friend! (click 
here)










Rabbit Air Purifiers- Save 40% on High Quality Ultra-Quiet HEPA air purifiers. Free Shipping on orders over $300! Research an entire library of over 100 articles on air quality, allergy and air purifiers.











1000s of Discount Bird Supplies and Pet Supplies at ThatPetPlace.com











Sunny Bluebird Vergil Paco Floyd
Skye Pilot Tweety Pita Yingwu
Maeta Poncho Taz General Lee Sparky
Pumpkin Ozzie Expo Thelma & Louise Buffy
Lemon Sony Roxy Buffett Joey
Maxi Dusty Sammy Gumby Hershey
Cisco Paddy Rosina Blueberry Croix
Fidelio Porgy & Bess Carmen Moondust Q and V
Romeo & Juliet Buster Sunshine Megabyte Scooter
Moonshine Sugar Sweetie Packer Tazzy
Wacky Petey Juan Studebaker/Studie Tiger
Tweets Keiko Cody Snickers MacDaddy
Littlefoot Okie Rex Monster Chipper
Minnie Pearl Bart Ricki Kiwi
Silly Sunny Reba Patience Celestino ( or Tino)
Wisper Buddy Angel Yogi & BooBoo Brooklyn J. Front Wolvek
Yuska
a.k.a. JJ
Zelda Tookie Harley Lady & Buster Malcolm
Louie Zoey Jonah Bonzai Jax
Henry & George Nikon Fuji Canon Stash
Kodak Ricky & Lucy Princie Mokie & Kika Coco - a.k.a.
Green Tyrant
Penny Molly Thea Kelvin Charlie
Pirate Peaches Candy Ozzy Ti-Pou
Wyatt Chicharo Bandit Happy Obayo & Obiyo
Oscar & Munro Wilaric Moonbeam Cheyenne & Dakota Rhapsody & Sonata
Tango Sweet Pea Puppy Goose Maxfli & Hogan
Harry Sophie Rosa Robbie Mercedes & Benz
Bali Pete Casper Tweety Elvis & Priscilla
Petrie Billy Aruba Chipper Sweet Pea
Nibbles Sparky Eli Tucker Chip & Dale
Mickey Chirpee Randy Junior Suger & Spice
Bopper Dusty Rockie Sunshine Blueberry
Sprite Belle Petri Greycee Hal & Dol
Pepper Coconut Banana Jill & Time Spaz & Val
Mr. Bird Oliver Wendy Jezebel Ethel & Fred
Jammal Cooper Paul Honey Robinson Kruso
aka: Kruz or Kruso
Bronco Bird Krazy Knoodles Kiki McGyver Hump & Rump
Samantha Whiskey Kio Rosie Earlybird
Cookie Chirpy Timmy Vanilla Baby Pepper
Whitney Sweetie Blue Sally Sunshine
April Marcey Sheba Madi Martini & Rossi
Buford Micky Chip Pogo & Oscar Inigo & Vizzini
BiBi Pike Sam Bongo Bird Goldie Girl
Pretty Girl Guido Elvis Bernie Arena
a.k.a. Birdini
Sweet Sarah
Corky Luckey Tasha Magic Sydney
Beaker Clancey Kelly Ceasar Seymore
Banjo Apollo Martin Merlyn Henery
Kitty & Kat Kiwi Willy Toots Rella (a.k.a.)
"Relly-Belly"
Rosalita Rosario Barney Bernadette Handsome &
Gretel
Jaybird Eustic Sully Tango Siu Pak
(in chinese means
"Snow White"
Tootsie Friscoe Kudzu Careson Matti
(short for Matilda)
Gracie Cloe Kauai Willow Rosemarry & Thyme
Mollymabel Sydney Zeus Rocket &
Bird
Bryd-Byrd
a.k.a.
Makana Akua
Katie Digit Sasha Joe Maverick Han & Leia
Hunter Newton Pip Sydney Peri
(short for Peridot)
Topaz Blondie Zorro Calypso Nike & Reebok
Micah Zeke Fang Peach Skylar
Piper Tucker Mango Jessie Chippie
Teke Squidly Mo Brokerick Elvis
R.C. Baby Doll Joe Fred Sweetie Pie
Buddy Casper Peepers PJ Ullyssess
Clare Yoda Tia Jazz & Lemon HoJo & Jenny
Monet Van Gough Piglet Frankie Picasso
Truffles Moesby Blue Teale Andre & Toni
Peabody Pav Raider Featherstone Glimfeather
Prizzle Wiggles Pokey Zebadiah Billie & Babe
Rock-it Squirt Speedy Scooter Conway Tweety
Peanut Kokomo Largo Gabriel Quaker "Oats"
Huey Chaz Giggs Kipper Samantha "T" Bird
Toby & Tara Scooby Rugby Cujo & Chance Hambone & Edie
Cricket Cuddles Rio Ghost Bluebird of Happiness
Bijou Chekai Shiloh Malibu Robert the Bruce
Touche Yoshi Kudo Tigger Zollaster Master of Disaster
Spike Harley Alphie Greystoke Pandora
Piccolo Rajah Gizmo Shanquia Kadeshiah
Mojo Sparx Xander Scully  
  Page 1  | Page 2  | Page 3  | Page 4 |  Page 5  | Page 6 |  Page 7 |  Page 8 | Page 9 |  Page 10 |
  Page 11 | Page 12 | Page 13 | Page 14 | Page 15 |  Page 16 | Page 17 | Page 18 | Page 19

Saturday 23 February 2013

ஜென் தத்துவ கதைகள்

இந்த புத்தகத்தை என் உறவினர் ஒருவர் எனக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் குருஜி வாசுதேவ். 77 சிறு கதைகளில் ஜென் தத்துவங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். கதைகள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாக சில சமயம் உணர்வு ஏற்பட்டாலும், அங்காங்கே சொல்லப்பட்டு இருக்கும் நல்ல கருத்துகளினால் அந்த உணர்வுகள் மறைந்து விடும்.

ஜென் என்றால் என்ன - ”இயல்பாயிருத்தல்” என்பதே அதன் அர்த்தம். எது நடந்தாலும், அதன் போக்கில் விட்டு விடு. எதையும் விரும்பாதே, எதையும் வெறுக்காதே. ஜென் குருக்கள் இந்த தத்துவங்களைப் பின்பற்றி வாழ்ந்தார்கள். அவர்கள் தங்களின் சீடர்களின் கேள்விகளுக்கு அவர்களுக்கு தானாகவே பதில் தெரியும் வகையில் மிக இயல்பாய் பதில் சொல்வது வழக்கம். மக்கள் ஜென் குருக்களிடம் சென்று , “எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள்” என்று கேட்டு பெறுவது பிரபலமான ஒன்றாக இருக்கிறது.

இந்த புத்தகத்திலிருந்து ஒரு கதை உங்களுக்காக!!

“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம் சொன்னான்.

“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.

“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”

இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.

துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.

“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.

“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”

“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.
_________________________________________________________________________________
வெறுமையை உணரும் முன்பு அதுபற்றி எவரும் கற்பனைகூட செய்ய முடியாது. அதுபற்றி உணர்ந்த பிறகோ அதைப் பற்றிப் பேசவும் முடியாது. அதைப் பற்றிப் பேசுவதற்கு சொற்களும் கிடையாது.
_________________________________________________________________________________

எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறிவிடு. எதையும் தேடித் துரத்தாதே. எப்போதும் இயல்பாயிரு. தன்னைத்தான் அறி.
_________________________________________________________________________________

RGO, GMT, UT, UTC என்றால் என்ன?

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இன்றைய நாளில், நேரத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. எதில் எடுத்தாலும் துல்லியமாகச் செயல்படும் மனிதர்களையும் அவன் மூலையின் குழந்தையான கணினிகளையும், GPS வழிகாட்டிச் சாதணங்களையும், இயந்திர மனிதர்களையும் இன்ன பிற கருவிகளையும் இன்று நம் கண் முன்னே பார்க்கத்தான் செய்கிறோம். இந்த நிலையை உருவாக்கியதன் பின்னனி என்னவாக இருக்க முடியும்?? தேவைதான்..!
அன்றைய தேவை நேரநிர்ணயம். அதாவது பிரிட்டன் ஆண்டுவந்த பகுதிகளையும், தன்னுடைய சொந்த பகுதிகளையும் நேரத்தை வைத்து ஒருங்கிணைக்க வேண்டும். வான இயற்பியல் மற்றும் கடல் பயணங்களின் தேவைகளின் ஊடே நேரத்தையும் அதன் கட்டுப்பாட்டையும் உணர்ந்த அன்றைய பிரிட்டன் அரசாங்கம் நேர நிர்ணயத்திற்காகப் பல உலகளாவிய மாநாடுகளை நடத்தியது. பல ஆய்வுக்கூடங்களைத் திறந்தது. உலகளாவிய பல அறிவியல் அறிஞர்களின் துணைக் கொண்டு வகுக்கப்பட்ட நேரக்கணக்கினையும் அதன் நிர்ணயத்தையும் இறுதியில் நடைமுறைப்படுத்திக் காட்டியது. இதன் விளைவாகக் கிடைத்தது தான் இந்த GMT, UT, UTC களெல்லாம்.
GMT, UT, UTC ஆகியவைகளை நாம் பல இடங்களில் படித்ததுண்டு. படித்துவிட்டு குழம்பியதும் உண்டு. GMT என்றால் என்ன? UT அல்லது UTC என்றால் என்ன? என்ற தெளிவில்லாமல் பல இடங்களில் அறிவியல் சம்பந்தமான நேர கணக்குகளின் புரிதல்கள் தடைப்பட்டிருக்கலாம். இவற்றை பற்றி இங்கு காண்போம்.... 
  • RGO- Royal Greenwich Observatory (ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம்)
  • GMT- Greenwich Mean Time (கிரீன்விச் இடைநிலை நேரம்)
  • UT- Universal Time (உலகளாவிய நேரம்)
  • UTC- Universal Time Coordinated (ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்
ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greenwich Observatory):
முன்னதாக 1928 முதல், லண்டனில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தில் இயங்கி வந்த வான் ஆய்வு மையமே ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greewich Observatory- RGO) என்று அழைக்கப்பட்டது. 1948 ல், இந்த ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (RGO), சசெக்ஸில் உள்ள Herstmonceux Castle என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது. (இடம் மாற்றப்பட்டாலும் இதுவும் ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் என்றே அழைக்கப்பட்டது).
இதன் வரலாற்று கட்டிடங்கள் மற்றும் ஆய்வுக் கருவிகள் அனைத்தும் தேசிய கடல்சார் அருங்காட்சியத்துடன் (National Maritime Museum)  இணைக்கப்பட்டு, இதன் பெயர் புராண கிரீன்விச் வானாய்வுக் கூடம் (Old Royal Greenwich Observatory- ORGO) என்றானது.
மீண்டும், 1998ல் ​​சசெக்ஸில் இருந்த RGO வின் இயக்கம் நிறைவு பெற்றதைத் தொடந்து, முன்னர் கிரீன்விச்சில் இருந்த புராண ஆய்வுக்கூடம் (ORGO) மீண்டும் செயல்படத் துவங்கியது. இந்த முறை இதன் பெயர் Royal Obervatory Greenwich (ROG) என்றானது.
கிரீன்விச் இடைநிலை நேரம் (Greenwich Mean Time- GMT):
கிரீன்விச் இடைநிலை நேரம் - GMT என்பது கிரீன்விச் ஆய்வுக்கூடத்தை அடிப்படையாக கொண்டு போடப்பட்டுள்ள தீர்க்கரேகையை (Zero degree Longitude) பொறுத்து அமையப்பெற்ற சூரிய ஓட்டத்தின் அடிப்படையிலான ஒரு கால அளவு ஆகும்.
அதாவது நடுமட்ட சூரியன் (Mean Sun) சரியாக இந்த ஆய்வுக்கூடத்தின் தீர்க்கரேகையை (Zero degree) ஒத்திருக்கும் பொழுது மணி 12:00 GMT ஆகும். (பூமியின் சுழல் அச்சு 23.5 degree சாய்ந்துள்ளதால், சில நேரம் மெதுவாகவும் சில நேரம் வேகமாகவும் சூரியன் நகர்வது போல் இருக்கும்.  இதை சரி செய்யவும், ஒரே சீரான சூரிய ஓட்டத்தை அளவிட்டு நேரத்தை குறிப்பதற்காகவே 'நடுமட்ட சூரியனின்' ஓட்டம் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.)
இந்த வகையான நேர அளவே அக்காலத்தில் சிவில் மற்றும் கடல் சார்ந்த பயண பயன்பாட்டிற்கு வகுக்கப்பட்டிருந்தது.
உலகளாவிய நேரம் (Universal Time):
1928 ஆம் ஆண்டில் சர்வதேச வானியல் சங்கம் பரிந்துரைத்ததின் படி அன்றிருந்த கிரீன்விச் சிவில் நேரமே (GMT) உலகளாவிய நேரம் (UT) என குறிப்பிடப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் தான் "உலகளாவிய நேரம் (Universal Time)" மற்றும் "உலகளாவிய நாள் (Universal Day)" அறிமுகமானது.
குறிப்பிட்ட வான் ஆய்வுக்கூடத்தில் வகுக்கப்பட்ட நேரத்தை UT0 ("UT-பூஜ்யம்") என்றனர். பூமியின் சுழட்சியினால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்யும் பொருட்டு, UT0 உடன் அதற்குரிய நாழிகையில் திருத்தங்கள் (லீப் நொடிகள்) சேர்க்கப்பட்டு UT1 அறிமுகப்படுத்தப்பட்டது. UT0 வின் புதுப்பிகப்பட்ட வெளியீடு UT1 எனலாம்.
எனினும் பூமியில் ஏற்படும் பருவ மாற்றம், கடல் சீற்றம்போன்றவற்றால் ஏற்படும் விசையேறுதலுக்காக (Momentum changes) UT1னுடன், சில ஈடேற்றம் செய்யப்பட்டு UT2 உருவாகியது. UT1 ன் புதுப்பிகப்பட்ட வெளியீடு UT2 எனலாம்.
இந்த UT2  நேர அளவிலும் கூட,  ஓத உராய்வு (Tidal Friction), மற்றும் அதிவேக ஓத மற்றும் புயல்கள் (High Tides and Winds) போன்ற அதிபயங்கர மாற்றங்களினால் பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தை தன்னகத்தே உட்கொள்ள முடியவில்லை.எனவே, இந்தச் சூரிய அளவு முறையிலும் நேர நிர்ணயத்தின் துல்லியம் எட்டப்படவில்லை. இந்த வகையான நேர நிர்ணயங்கள், சிவில் பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்புடையதாக இருந்தது.
சூரியனை வைத்தும், சீரற்ற பூமியின் சுழற்ச்சியை வைத்தும் ஒரு துல்லியமான நேர அளவை குறிப்பிட முடியாத காரணத்தால் அறிவியல் விஞ்ஞானிகள் மாற்று வழியை அறிமுகப்படுத்தினர். அது தான், அட்டாமிக் டைம் (Atomic Time) - அணு நேரம்.
ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC  (Coordinated Universal Time):
சீசியம் (Cesium) அணுக்கதிர்களின் நிலையான அதிர்வலைகளின் உதவியால் நேர அளவீடு கருவி ஒன்றின் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. இது அணு நேரம் (அட்டாமிக் டைம்) என்றும் இதன் அளவு அணு நொடிகள் (அட்டாமிக் செகண்ஸ்) என்றும் அழைக்கப்படுகிறது. இது முற்றிலுமாக ஒரு அறிவியல் சாதனமாகும். ஒரு நாளின் அளவாக 86,400 விநாடிகள் கொண்டு ஒரு நாளின் நேரம் கணக்கிடப்படுகிறது. கணக்கிடப்பட்ட நேரத்திற்கும் சூரியனின் ஓட்டத்திற்கும் (Actual Time based on Sun) எந்த தொடர்புமிருக்காது.
ஆயினும், விண்ணில் அமைக்கப்பட்டுள்ள International Earth Rotation and Reference Systems Service (IRES) பூமியின் ஓட்டதை கண்கானித்து, தேவைப்படும் பொழுது UTC யுடன் லீப் நொடிகளை சேர்க்கவும் பரிந்துரைக்கும். அதாவது, கணக்கிடப்பட்ட நேரத்தோடு அதற்குரிய திருத்தங்களும் இடம்பெறும். (இங்கு லீப் நொடிகள் என்பது பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை/ பின்னடைவுகளை உள்ளடக்கி, கூட்டவோ குறைக்கவோ செய்யப்படும் மணித்துளிகளின் அளவு ஆகும்).
இவ்வாறு பூமியின் சுழற்சிற்கேற்ப கணக்கிடப்பட்ட நேரம் அவ்வப்பொழுது ஒத்தியக்கப்படுவதால் இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC  (Universal Time- Coordinated) எனப்படுகிறது.
அணு நேரம் UTC, சூரிய நேரமான UT1 ஐ ஒத்து அதிகபட்சமாக 0.9 நொடிகள் வரையில் தான் வித்தியாசத்தில் இருக்க முடியும். இரண்டிற்கும் அதிகபட்சம் 0.9 நொடிகள் வரையில் வித்தியாசம் இருக்கும் என்பதால் மிகத்துல்லியமான GPS, வானியல் கணக்கு போன்ற பயன்பாட்டிற்கு UTC மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். வானியற்பியல் கணக்கிற்காக நாம் பயன்படுத்து UTC நேர கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, GMT ---> UT0 ---> UT1 ---> UT2. தற்பொழுது உள்ள GMT ---> UT2 ஆகும்.
UTC கணக்கிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நேர நிர்ணயம் ஆகும்
சுருங்கச் சொன்னால், GMT அடைந்த பரிணாம வளர்ச்சியே UTC எனலாம் ! அளவீடு முறை மட்டும் வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம்.
-          ராசிக்
Bookmark and Share


Wednesday 20 February 2013

More than 100 Keyboard Shortcuts must read

More than 100 Keyboard Shortcuts must read
SHARE IT........

Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
...... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
25. NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder)
26. LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder)
27. RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder)
Shortcut Keys for Character Map
After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts:
1. RIGHT ARROW (Move to the rightor to the beginning of the next line)
2. LEFT ARROW (Move to the left orto the end of the previous line)
3. UP ARROW (Move up one row)
4. DOWN ARROW (Move down one row)
5. PAGE UP (Move up one screen at a time)
6. PAGE DOWN (Move down one screen at a time)
7. HOME (Move to the beginning of the line)
8. END (Move to the end of the line)
9. CTRL+HOME (Move to the first character)
10. CTRL+END (Move to the last character)
11. SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected)
Microsoft Management Console (MMC)
Main Window Keyboard Shortcuts
1. CTRL+O (Open a saved console)
2. CTRL+N (Open a new console)
3. CTRL+S (Save the open console)
4. CTRL+M (Add or remove a console item)
5. CTRL+W (Open a new window)
6. F5 key (Update the content of all console windows)
7. ALT+SPACEBAR (Display the MMC window menu)
8. ALT+F4 (Close the console)
9. ALT+A (Display the Action menu)
10. ALT+V (Display the View menu)
11. ALT+F (Display the File menu)
12. ALT+O (Display the Favorites menu)

MMC Console Window Keyboard Shortcuts
1. CTRL+P (Print the current page or active pane)
2. ALT+Minus sign (-) (Display the window menu for the active console window)
3. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
4. F1 key (Open the Help topic, if any, for the selected item)
5. F5 key (Update the content of all console windows)
6. CTRL+F10 (Maximize the active console window)
7. CTRL+F5 (Restore the active console window)
8. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )

Tuesday 19 February 2013

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை



பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 ‘ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும்,தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை
‘தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ‘ என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல் அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,
அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, ‘வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ‘ என்று பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல் ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று போடுகிறார்கள்.அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால் அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில் நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.
(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)
In what way Jinnah is not a North Indian ? How is the [i]names Jinnah and Robinson so sweet to you Sir ? How is [/i]
the name of poor Tilak so bitter to you Sir ? I am not [i]able to understand. [/i]
ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில் ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர் பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம் அல்லவா ?
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக் காட்டுகிறது ? அதற்கு மேல் ‘வடநாட்டான் திராவிட நாட்டை சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ‘ என்று சொல்கிறார்கள்.மிக்க மகிழ்ச்சி.
டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச் சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம் பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில் ‘டால்மியாபுரம் ‘ என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன் கேட்பானா ? ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.
அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள் பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது சொல்லலாம்.வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு அனுகூலமாக யுத்த ‘புரபகண்டா ‘ ‘செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம் படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.
‘தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ‘ என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி எதிர்ப்பு வருகிறபோது, ‘ஹிந்தியைப் புகுத்தாதே ‘ என ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் ‘தமிழ் மாகாணம் ‘ என்று பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ் என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று
சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள் ‘ரோமாபுரி ராணி ‘ என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர் அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?
எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி கதை போதாது என்று ‘தங்கையின் காதல் ‘ என்று ஒரு கதை
எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான் அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?
இதுவா தமிழ் நாகரீகம் ? சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக
விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ம.வெங்கடேசன்
(இப்படிப் பல சுவையான தகவல்கள் இருக்கும் இந்தப் புத்தகம், திராவிட இயக்கங்களின் பித்தலாட்டங்களை, ஏமாற்று வேலைகளை ஆவணப் படுத்துகிறது. தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அரசியல்வாதிகளின் மறுபக்கத்தை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் ‘ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்)
ஒரு இணையத்தில் இருந்து எடுத்தது.



ஆசை படுவது யார்?

Archive for the ‘ரமண மகரிஷி’ Category




ஆசை படுவது யார்?
என்று நீங்கள் அமைதியாக உட்கார்ந்து சிந்தியுங்கள்.
உங்கள் உடலா?,உங்கள் மனமா?
நிச்சயம் உடலாக இருக்க முடியாது.
ஏனெனில் அது மனம் வழியே செயல்படுகிறது.
பிறகு மனமா?ஆமாம்.
இப்பொழுது அப்படியே இருக்கட்டும்.
மனம் எப்படி செயல்படுகிறது?
உங்கள் இறந்தகால,வருங்கால எண்ணங்களினால்,
அறிந்ததை அடைய ஆவல் கொண்டு உங்களை
அலைய வைக்கிறது.
“இதோ இன்பம்,அதோ இன்பம்” என்று உங்களை
விரட்டிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் ஒன்றை அடைந்தால்,அதில் சலிப்புற்று,
வேறு ஒன்றிற்கு ஏன் ஆசைபடுகிறீர்கள்? என்று
என்றைக்காவது ஆழ்ந்து சிந்தித்து இருக்கிறீர்களா?
இந்த உடலுக்கும் மனதிற்கும் எது ஆதாரம்,
ஏன் மனம் அலை பாய்ந்துக்கொண்டிருக்கிறது
என்று தனிமையாக சிந்தித்து இருக்கிறீர்களா?
அப்படி ஒருவர் சிந்திக்கத் தொடங்கினால்,
உண்மையில் “தான் யார்” என்று விளங்க ஆரம்பிக்கும்.
அது உங்கள் “உயிர்தன்மை” யைத் தவிர
வேறு எதுவும் இல்லை.
அது தன் உணர்வாய்,தன் அறிவாய்,
தன்னையே தேடுகிறது.
ஆனால் அதுவே மனமாகி,படர்க்கை நிலை அடைந்து,
அந்த “தேடுதலை” சாதாரண மக்களிடம்
இந்த உலகத்தில் தேட வைக்கிறது.
தன்னை தானே தேடுவது உண்மைநிலை.
உலகத்தில் தேடுவது பொய்மைநிலை.
இந்த வித்தியாசத்தை ஒருவன் நன்றாக புரிந்துக் கொள்ளவேண்டும்.

Rate this:

 
 
 
 
 
 
2 Votes

Share this:


இராஜபாளையத்து நாயகர்கள்

நாய்கள் !

டாபர்மன் நாய் இருக்கிறதே , இது அதன் முதலாளிக்கு முன்னே ஓடி முதலாளியையே முன்னுக்கு இழுக்கும் . அல்சேஷன் என்று அழைக்கப்படும் ஜெர்மன் ஷெப்பர்ட் இருக்கிறதே ,இது அதன் உரிமையாளருக்குச் சமமாக நடந்து வரும் . பொமரேனியன் இருக்கிறதே , இது முதலாளி முன்னே நடக்க , அவருக்குப் பின்னால் வரும் .-- லேனா தமிழ்வாணன் .குருவுக்காக
ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் வழிவந்த மன்னர்கள்,

விஜய நகரில் பல ஆண்டுகள் இருந்தனர்.

அவர்கள் ஆந்திர வம்சம் ஆக இருந்தனர்.

ஆனால் பலவித போர்களால் அவர்கள் ஆட்சி

முடிவடைந்து, தங்கள் உயிரைக் காக்கத்

தப்பித்து, தமிழகம் நோக்கிப் பிரயாணித்தனர்.

அப்போது அவர்கள் வளர்த்த செல்லப் பிராணிகளும் அவர்கள் கூட வந்தன.
அவர்கள் நடந்து நடந்து திருவாங்கூர் சமஸ்தானப் பகுதியின் எல்லையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தின் கீழ் வந்து, அங்கேயே தங்கவும் ஆரம்பித்தனர். அகதிகள் போல் முதலில் முகாம் இட்டு, பின் அங்கேயே இருக்க முடிவு செய்து, பக்காவாக வீடு கட்டித் தங்க ஆரம்பித்தனர். சஞ்சீவி மலைப் பகுதியில் பரவி  அந்த இடத்தையே அவர்களது சொந்தமாக்கிக்கொண்டனர்.
அந்தப் பகுதியையே ராஜபாளையம் என்கிறார்கள். அவர்களுடன் வந்த நாயின் ஒரு ஜாதி, ராஜபாளையம் என்ற பெயரில் மிகவும் பிரபலமானது. பார்த்தால் அல்சேஷன்  அல்லது ஜெர்மன் ஷெப்பர்ட் போன்று பெரிதாக இருக்கும். காவலுக்கு மிகச் சிறந்த நாய். அதற்கு பாராமரிப்புச் செலவும் குறைவு. சைவம் தான் விரும்பிச் சாப்பிடும். தயிர் சாதம், பாலுஞ்சாதம் என்று எது கொடுத்தாலும் சாப்பிடும். இதற்கு மோப்பச் சக்தியும் அதிகம். இன்றும் போலீசின் பல படைகளில் குற்றம் கண்டுப்பிடிக்க இந்த வகை நாயை அழைத்துப் போகிறார்கள். இன்றும் பல பங்களாக்கள், எஸ்டேட்டுகள், பெரிய தோட்டங்கள் போன்ற இடங்களில் இவற்றை வளர்க்கிறார்கள்.
rajapalayam dogடாபர்மென், லெப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாய்களுக்குச் சமமாக இதுவும் இருக்கிறது. மிகவும் விசுவாசமான நாய். ஆனால் எஜமானரின் கட்டளைக்குத்தான்  அடிபடியும். கவ்வினால் பிடி சதை வந்துவிடும். வீட்டைப் பாதுகாக்க மிகச் சிறந்த நாய். ஆனால் அன்பையும் எதிர்பார்க்கும். அதன் கண்கள், காது ஆகியவை மிக அழகு.
மேற்குப் பகுதியில் நிறைய இடங்களில் இந்த வகை நாய்களை நான் பார்த்து இருக்கிறேன். ஏன்! ஜெர்மன் ஷெப்பர்டு என்ற நாயை வளர்த்தும் இருக்கிறேன். அதற்கு என்ன பழக்கம் கற்றுக் கொடுக்கிறோமோ, அதையே தவறாமல் செய்யும். நான் அதற்கு வெளியிலிருந்து வந்த பிறகு நேரே பாத்ரூமுக்குப் போய்க் கால்கள் அலம்பக் கற்றுக் கொடுத்தேன். அதே போல் எப்போது வெளியிலிருந்து வந்தாலும் நேரே பாத்ரூமுக்குப் போய்த்தான் நிற்கும். தவிர பூஜை முடியும் நேரம், கற்பூர ஆரத்தியின் போது எங்கிருந்தாலும் தவறாமல் வந்து பூஜையில் கலந்துகொள்ளும்.
பாவம் அதற்கு 11 வருடங்கள் தான் என்னுடனிருக்க விதி வகுந்திருந்தது போலும். என் மகனின் மடியில் படுத்தபடி, விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டபடி, வாயில் கங்கை நீர் ஊற்ற, உயிரை விட்டது. பின் தில்லியில் யாரிடமிருந்து இதை வாங்கினோமோ, அந்த டாக்டர் வீட்டு மைதானத்தில், மனிதர்களுக்குச் சொல்லும் மந்திரங்கள் எல்லாம் சொல்லி, வாயில் அரிசி போட்டுப் புதைக்கப்பட்டது. பின் அங்கு ஒரு வேப்ப மரமும் நடப்பட்டு, அங்கு ஒரு பெயர்ப் பலகை வைத்தோம். அதிலுள்ள வாசகம் “அமைதியான தூக்கம்”.
ராஜபாளையம் போல் வேறொரு நாயும் இருக்கிறது. சிப்பிப்பாறை நாய் என்று அதை அழைக்கிறார்கள். மிகவும் மூளை உள்ளது. வெள்ளையாக இருக்கும். 4 அடி உயரம், 4 அடி நீளம், கூர்மையான் கண்கள், உதடு ரோஜா நிறம்…….. பார்க்க சாது போல் இருக்கும். ஆனால் யாராவது எதாவது தொட்டால் அவ்வளவுதான், பிடுங்கிவிடும்.
தன்னலமில்லாத அன்பு, நாயினுடையது. அதன் தலைவன் எத்தனை அடித்தாலும் அதை மறந்து வாலை ஆட்டிக்கொண்டு திரும்ப அன்பு செலுத்தப் போகும். மனிதன் மன்னிக்கும் குணம் கொண்டு இதே போல் அன்பு காட்டி வந்தால், உலகம் எத்தனை நன்றாக இருக்கும்!

அறத்துப்பால்/ The Worthiness of Virtue

அறத்துப்பால்/ The Worthiness of Virtue

அறத்துப்பாலில் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை

1) பாயிரவியல்/ Preface
2) இல்லறவியல்/ On Domestic Virtue
3) துறவறவியல்/ On Ascetic Virtue
4) ஊழியல்/ On fate

பாயிரவியல்/Preface
அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து/In praise of God
அதிகாரம் 2 - வான்சிறப்பு/Significance of Rain
அதிகாரம் 3 - நீத்தார் பெருமை/The Greatness of Ascetics
அதிகாரம் 4 - அறன் வலியுறுத்தல்/Emphasis on Virtue

இல்லறவியல்/On Domestic Virtue
அதிகாரம் 5 - இல்வாழ்க்கை/Household Life
அதிகாரம் 6 - வாழ்க்கைத் துணைநலம்/The worth of a Life Mate
அதிகாரம் 7 - மக்கட்பேறு/Wealth of Children
அதிகாரம் 8 - அன்புடைமை/Possession of Love
அதிகாரம் 9 - விருந்தோம்பல்/Hospitality
அதிகாரம் 10 - இனியவை கூறல்/Speaking Sweet Words
அதிகாரம் 11 - செய்ந்நன்றி அறிதல்/Being Grateful
அதிகாரம் 12 - நடுவு நிலைமை/Impartiality
அதிகாரம் 13 - அடக்கமுடைமை/Possession of Self-control
அதிகாரம் 14 - ஒழுக்கமுடைமை/Possession of Righteous conduct
அதிகாரம் 15 - பிறனில் விழையாமை/Not desiring another man's wife
அதிகாரம் 16 - பொறையுடைமை/Possession of Patience
அதிகாரம் 17 - அழுக்காறாமை/Not envying
அதிகாரம் 18 - வெஃகாமை/Not coveting
அதிகாரம் 19 - புறங்கூறாமை/Refrain from slandering
அதிகாரம் 20 - பயனில சொல்லாமை/Avoiding useless talk
அதிகாரம் 21 - தீவினையச்சம்/Fear of evil deeds
அதிகாரம் 22 - ஒப்புரவறிதல்/Knowing one's obligation to Fellowmen
அதிகாரம் 23 - ஈகை/Giving to the poor
அதிகாரம் 24 - புகழ்/Glory
அதிகாரம் 25 - அருளுடைமை/Possession of Compassion
அதிகாரம் 26 - புலால் மறுத்தல்/Avoiding meat

திருகுறள் Thirukural

திருகுறள் - பற்றி


தமிழில் உள்ள நூல்களிலேயே
சிறப்பிடம் பெற்ற நூல்
திருக்குறள்.இது அடிப்படையில் ஒரு
வாழ்வியல் நூல். மனித
வாழ்வின் முக்கிய அங்கங்
களாகிய அறம் அல்லது தர்மம்,
பொருள், இன்பம் அல்லது
காமம் ஆகியவற்றைப் பற்றி
விளக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர்
திருவள்ளுவர். இவருடைய
இயற்பெயர் என்ன என்பதுவும்
மேற்கொண்ட விபரங்களும்
சரிவரத்தெரியவில்லை.
இவரைப்பற்றிச்
செவிவழிமரபாகச் சில
செய்திகள் விளங்குகின்றன.
ஆனால் அறுதியான வரலாறு
கிடையாது. அந்தச்
செய்திகளின்
வாயிலாகப்பெறும்
தகவல்களின்படி, இவர்
வள்ளுவ மரபைச்சேர்ந்தவர்
என்றும், மயிலாப்பூரில்
வசித்தவர் என்றும்
தெரிகிறது; இவருடைய
மனைவியார் வாசுகி
அம்மையார்.கற்பியலுக்கு
மிகச்சிறந்த இலக்கணமாக
விளங்கியவர். வள்ளுவர்
தாம் எழுதிய முப்பால் நூலை
தமிழ்ச்சங்கத்தில்
அரங்கேற்றம் செய்ய மிகவும்
சிரமப்பட்டதாகவும்,
முடிவில் ஒளவையாரின்
துணையோடு
அரங்கேற்றியதாகவும்
அச்செய்திகள் வாயிலாக
அறிகிறோம்.
திருவள்ளுவரை நாயனார்,
தேவர், தெய்வப்புலவர்,
பெருநாவலர், பொய்யில்
புலவர் என்றும் சில
சிறப்புப்பெயர்களால்
அழைப்பர்.
பிற்காலத்தில்
திருவள்ளுவர் பெயரால் வேறு
சிலநூல்களை வேறு சிலர்
இயற்றியுள்ளனர். அவை
சித்தர் இலக்கியத்தைச்
சேர்ந்தவை.
திருக்குறள் இயற்றப்பட்ட
காலம் இன்னும் சரியாக
வரையறுக்கப்படவில்லை.
கிருஸ்துவ சகாப்தத்தின்
முன் பகுதியைச்
சேர்ந்ததாகப் பலர்
கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில்
நான்கு பெரும்
பகுப்புக்கள் உள்ளன.
    1.எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு ஆகியவை
அடங்கிய
பதினென்மேல்கணக்கு
    2.பதினென்கீழ்க்கணக்கு
    3.ஐம்பெருங்காப்பியங்கள்
    4.ஐஞ்சிறு காப்பியங்கள்
    ஆகியவை அவை.
அவற்றில்
பதினென்கீழ்க்கணக்கு
எனப்படும் பதினெட்டு
நூல்களின் வரிசையில்
"முப்பால்" என்னும் பெயரோடு
இந்நூல் விளங்குகின்றது.
"அறம், பொருள், இன்பம்", ஆகிய
மூன்று பால்களும்
கொண்டமையால் "முப்பால்"
எனப் பெயர் பெற்றது.
முப்பால்களாகிய ஆகிய இவை
ஒவ்வொன்றும் "இயல்" என்னும்
பகுதிகளாக மேலும்
பகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இயலும் சில
குறிப்பிட்ட
அதிகாரங்களைக் கொண்டதாக
விளங்குகின்றது. ஒவ்வொரு
அதிகாரமும்
பத்துபாடல்களைத் தன்னுள்
அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்துமே
குறள் வெண்பா என்னும்
வெண்பா வகையைச் சேர்ந்தவை.
இவ்வகை வெண்பாக்களால் ஆகிய
அக்காலத்திய முதல் நூலும்
ஒரே நூலும் இதுதான்.
குறள் வெண்பாக்களால்
ஆனமையால் "குறள்' என்றும்
"திருக்குறள்" என்றும் இது
பெயர் பெற்றது.
"பாயிரம்" என்னும்
பகுதியுடன் முதலில்
"அறத்துப்பால்" வருகிறது.
அதிலும் முதலில்
காணப்படுவது , "கடவுள்
வாழ்த்து" என்னும்
அதிகாரம். தொடர்ந்து, "வான்
சிறப்பு", "நீத்தார் பெருமை",
"அறன் வலியுறுத்தல்", ஆகிய
அதிகாரங்கள்.
அடுத்துவரும் "இல்லறவியல்"
என்னும் இயலில் 25
அதிகாரங்கள்; அடுத்துள்ள
துறவறவியலில் 13
அதிகாரங்களுடன்
முதற்பாலாகிய
அறத்துப்பால் பகுதி
முடிவுறுகிறது.
அடுத்து வரும்
"பொருட்பாலி"ல் அரசு இயல்,
அமைச்சு இயல், ஒழிபு இயல்
ஆகிய இயல்கள் இருக்கின்றன.
அரசு இயலில் 25 அதிகாரங்கள்
உள்ளன. அமைச்சு இயலில் 32
அதிகாரங்களும், ஒழிபு
இயலில் 13 அதிகாரங்களும்
உள்ளன.
கடைசிப்பாலாகிய
"இன்பத்துப்பால்" அல்லது
"காமத்துப்பாலி"ல் இரண்டு
இயல்கள்; களவியலில் 7
அதிகாரங்களும், கற்பியலில்
18 அதிகாரங்களும் உள்ளன.
ஆகமொத்தம் 7 இயல்கள்; 133
அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000
சொற்களில் வள்ளுவர்
பாடியுள்ளார். ஆனால்
இவற்றில் ஐம்பதுக்கும்
குறைவான வடசொற்களே உள்ளன.
"அகரம் முதல
வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."
என்று தமிழ்
நெடுங்கணக்கின் முதல்
எழுத்தாகிய "அ" வில்
ஆரம்பித்து, 1330 ஆம்
குறளாகிய,
"ஊடுதல் காமத்திற்கின்பம்;
அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்"
என்று தமிழ் மொழியின்
கடைசி எழுத்தாகிய "ன்" னுடன்
முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா
அங்கங்களையும்
திருக்குறள் கூறுவதால்,
அதைச் சிறப்பித்துப் பல
பெயர்களால் அழைப்பர்:
திருக்குறள், முப்பால்,
உத்தரவேதம், தெய்வநூல்,
பொதுமறை, பொய்யாமொழி,
வாயுறை வாழ்த்து, தமிழ் மறை,
திருவள்ளுவம் என்ற
பெயர்கள் அதற்குரியவை.
பழங்காலத்தில் இதற்குப்
பலர் உரை எழுதியுள்ளனர்.
அவற்றில் புகழ் வாய்ந்ததாக
விளங்குவதும் அதிகமாகப்
பயன்படுத்தப்பட்டதும்
பரிமேலழகர் உரைதான்.
தற்காலத்திலும் பலர் உரை
எழுதியுள்ளனர். அவற்றில்
தற்சமயம் சிறப்பாகக்
கருதப் படுவது திருக்குறள்
முனுசாமியின் உரை.
தனிமனிதனுக்கு உரிமையானது
இன்பவாழ்வு; அதற்குத்
துணையாக உள்ளது பொருளியல்
வாழ்வு; அவற்றிற்கெல்லாம்
அடிப்படையாக விளங்குவது
அறவாழ்வு. மனதே
எல்லாவற்றிற்கும் ஆதார
நிலைக்கலன்; மனத்துக்கண்
மாசிலன் ஆதலே அனைத்து அறம்;
அறத்தால் வருவதே இன்பம்.
அறவழியில் நின்று பொருள்
ஈட்டி, அதனைக்கொண்டு
இன்பவாழ்வு வாழ வேண்டும்.
அவ்வாறு உலகமாந்தரும்
இன்பமுறச் செய்யவேண்டும்.
பொருளியலாகிய
பொதுவாழ்வுக்கும் இன்ப
இயலாகிய தனிவாழ்வுக்கும்
அடிப்படை அறம்தான் என்பது
திருக்குறளின் மொத்தமான
நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள
நூல்களில் மூன்றாம்
இடத்தைத் திருக்குறள்
வகிக்கிறது. இதுவரை 80
மொழிகளில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது.
"இறைவன் மனிதனுக்குச்
சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச்
சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச்
சொன்னது திருக்குறள்" -
பாரதியார்

திருமந்திர விளக்கம்,கவியரசு கண்ணதாசன்

திருமந்திர விளக்கம்–புலவா் கீரன்!

பன்னிரு திருமுறைகளில் பத்தாவது இடத்தில் வைத்து போற்றப்படுவது திருமந்திரம். திருமூலா் அருளிய இந்த நூலினது விளக்கத்தை தெளிவாக எடுத்துக் காட்டி உரையாற்றுகிறார் புலவா் கீரன் அவா்கள்.
பகுதி 1:
பகுதி 2:


கவியரசு கண்ணதாசன் – சுகி சிவம்!

கவியரசு கண்ணதாசன் அவா்களின் பாடல்கள் காலத்தால் அழியாதவை! “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை!” என்று அவரே குறிப்பிடுவது போல என்றும் நிலைத்து நிற்பவை! அத்தகைய கவிஞனைப் பற்றி சுகி சிவம் அவா்கள் ஆற்றிய உரையை இங்கு இணைக்கிறேன்.
பகுதி 1 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்
பகுதி 2 :
தரவிறக்க இங்கே அழுத்தவும்

Valentine - Aasai vedkam ariyaatho? ஆசை வெட்கமறியாதோ..?



ஆசை வெட்கமறியாதோ..?   





குரு அரவிந்தன்            




ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை.




ழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்;களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம்; திரும்பிப் பார்க்க வைத்தது. ஏதாவது பாட்டைப் போட்டுவிட்டு அதற்கேற்பத் தலையசைக்கின்றாள் என்பது புரிந்தது. இளமை ஒருபக்கம் அவளிடம் துள்ளி விளையாட, அவள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருந்தில் என்னை அவள் கவர்ந்திருந்தாள்.


பச்சை விளக்கு எரியவே நான் வண்டியை முன்நோக்கி ஓட்டிச் சென்றேன். அடுத்த பச்சை விளக்கைத் தண்டும் போது சட்டென்று மஞ்சள் விளக்கு எரிந்தது. கடந்து மறுபக்கம் போய்விடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் முன்னால் சென்ற வண்டிகள் ஏதோகாரணத்தால் மெதுவாக நகரத் தொடங்கவே எனது வண்டி பாதுகாப்புக் கோட்டைக் கடக்கும்போது சிகப்பு விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. பொதுவாக வீதியைக் கடக்கும்போது இப்படியாக நடப்பதுண்டு என்பதால் ஏதோ கற்பனையில் இருந்த நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு சிகப்பு விளக்கில் தெருவைக் கடந்ததற்காகத் தண்டப்பணம் கொடுக்கும்படி தபாலில் அறிவிப்பு வந்தது.


அங்கே அந்த சந்தியில் கண்காணிப்புக் கமெரா இணைக்கப்பட்டிருந்ததை அவர்கள் அனுப்பிய படத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. எனது வண்டி கோட்டைத் தாண்டும்போது சிவப்பு விளக்கு எரிவதைத் துல்லியமாகத் தானியங்கிக் கமெரா படம் பிடித்திருந்தது. எனது கவனமெல்லாம் அவளது சிகப்பு நிற வண்டியில் இருந்ததால் நான் பாதையைக் கடக்கும்போது கமெராவைக் கவனிக்காமல் போயிருக்கலாம்.

அவர்கள் ஆதாரத்திற்காக அனுப்பிய புகைப்படத்தில் இன்னுமொரு விடையத்தை என்னால் அவதானிக்க முடிந்தது. அதாவது எனக்கருகே வண்டி ஓட்டிக் கொண்டு வந்த அந்தப் பெண்ணின் சிகப்பு நிற வண்டியும் எனது வண்டியைப் போலவே சிகப்பு விளக்கில் அகப்பட்டிருந்தது.
வண்டியின் இலக்கத்தை எடுத்து நண்பன் மூலம் எப்படியோ அவளது தொலைபேசி இலக்கத்தைக் கண்டறிந்து அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். முதலில் ஒன்றுமே தெரியாதது போல நடித்தவள் அந்தப் படத்தில் அருகே இருப்பது தனது வண்டிதான் என்பதை ஏற்றுக் கொண்டாள். தனது பெயர் நிஷா என்றும், தனக்கும் தண்டப்பணம் கட்டும்படி அறிவிப்பு வந்திருப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டாள். அவளது முகத்தை மட்டும் ஞாபகம் வைத்திருந்த எனக்கு அவளது குரலிலும் ஒருவித கவர்ச்சி இருப்பது, அவளோடு தொலைபேசியில் பேசும்போது புரிந்து கொண்டேன்.


தண்டப்பணம் கட்டினால் புள்ளிகள் பறிபோய்விடும், அதனால் வண்டிக்கான காப்புறுதி அதிகரி;த்து விடும் என்பதை அவளுக்கு விளங்கப்படுத்தினேன். நான் ஒரு சட்டத்தரணி என்பதைச் சொல்லி, எனக்காக நான் வாதாடும்போது அவளுக்கும் சேர்த்து வாதாடப்போவதாகச் சொன்னேன். முதலில் தயங்கியவள் ஒருவிதமாக ஒப்புக் கொண்டாள். அவளை முதன்முதலாகக் கண்ட அன்றே அவள்மீது எனக்கு ஒருவகை ஈர்ப்பு இருந்ததால் அவளது சம்மதம் எனக்குள் ஒருவித கிளுகிளுப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.


நான் தண்டப்பணம் சம்பந்தமாக சில விவரங்களை அவளிடம் கேட்டிருந்தேன். நானே அவளிடம் வந்து பெற்றுக் கொள்வதாகச் சொன்னபோது அவள் அதை மறுத்து தானே நேரில் கொண்டு வந்து தருவதாகச் சொன்னாள். எனவே தொடர்பு கொள்வதற்குச் சாதகமாக எனது செல்பேசி இலக்கத்தைக் கொடுத்திருந்தேன். மறுநாளே அவள் என்னைத் தொடர்பு கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு என்னைத்தேடி வந்திருந்தாள். எங்கேயாவது தனியாக உட்கார்ந்து ஆறுதலாகப் பேசலாம் என்று நினைத்து அவளை அழைத்தேன்.


‘வாங்க, ரிம்ஹோட்டனில காப்பி குடிச்சிட்டே உட்கார்ந்து பேசுவோமா?’ என்றேன்.
தலையசைத்துவிட்டு என்னோடு வந்தாள். ஆளுக்கொரு காப்பி எடுத்துக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்தோம்.
‘அப்புறம் சொல்லுங்க, நீங்க இங்கேதான் பிறந்தீங்களா நிஷா?’
‘ஆமா, நான் இங்கேதான் பிறந்தேன். எங்க அப்பா அம்மாதான் சிலோன்லை இருந்து வந்தவங்க’
‘இலங்கையில் எங்கே..?’ என்றேன்.
‘யாழ்ப்பாணம்’ என்று மொட்டையாய்ச் சொன்னாள்.
உங்க குடும்பத்தில நீங்க எத்தனைபேர், நீங்கதான் மூத்த பெண்ணா?
அவள் நெற்றியைச் சுருக்கி என்னை ஒரு மாதிரிப்பார்த்தாள்.
‘எனக்குத் தெரியுமே, ஏற்கனவே சொன்னாங்க நான்தான் நம்பவில்லை’ என்றாள்.
‘என்ன சொன்னாங்க, யார் சொன்னாங்க?’ என்றேன்.
‘சொன்னாங்க, கொஞ்சம் இடம் கொடுத்தா எல்லாமே விசாரிப்பாங்க என்று சொன்னாங்கள்.’
‘எல்லாமே என்றால்?’
‘ஊரைச் சொன்னால், ஊரில வடக்கா கிழக்கா தெற்கா மேற்கா என்றெல்லாம் கேட்பாங்க என்று சொன்னாங்கள’ என்றாள்.
‘ஓ அதுவா உங்க பிரச்சனை, நான் அதைக் கேட்கவில்லை. எனக்கு அது தேவையுமில்லை’
‘அப்போ என்னோட பிறந்த தினத்தை வைத்து எண்சோதிடம் பார்க்கப் போறீங்களா?’
‘என்ன நீங்க எல்லாமே தப்புத் தப்பாய் சிந்திக்கிறீங்க’
‘இப்ப எதுக்கு என்னை இங்கே வரச் சொன்னீங்க, இது எங்க முதலாவது டேற்ரிங் தானே?’ என்று அதிரடியாய்க் கேட்டாள்.
‘டேற்ரிங்கா என்ன சொல்லுறீங்க?’ எனக்குக் மெல்ல உதறல் எடுத்தது.
‘அப்போ ஏன் வரச்சொல்லிக் கூப்பிட்டீங்க’ என்றாள்.
‘நானா வரச்சொன்னேன், நீங்க தானே வருவதாகச் சொன்னீங்க, வந்த இடத்தில் ஒரு காப்பி சாப்பிடுவோமா என்று உங்களை உபசரித்தது தப்பா?’ என்றேன்.

‘நானா கேட்டேன், நீங்கதானே காப்பிக்குக் கூப்பிட்டீங்க, அப்புறம் இன்னொருநாள் டினருக்குக் கூப்பிடுவீங்க, அது இரண்டாவது டேற்ரிங்காய் போயிடும், அப்புறம் மூண்டாவது டேற்ரிங்.. தெரியும்தானே மூணாவது தடவை சந்திக்கும்போது என்ன செய்வாங்க என்று’  சொன்னவள் மீதமிருந்த காபியை உறிஞ்சியபடியே என் முகத்தில் ஏதாவது மாற்றங்கள் தெரிகிறதா என்று விழி உயர்த்திப் பார்த்தாள்.

இவளோடு கவனமாகப் பழகவேண்டும் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். இங்கே பிறந்தவள் என்பதால் டேற்ரிங் என்பதை சாதாரண விடையமாக எடுத்துக் கொள்கிறாளா எனக்கும் அவளுக்கும் இந்த விடையத்தில் என்ன வித்தியாசம். நாங்களும் எமக்குப் பிடித்தவர்களோடு ஆண் பெண் வித்தியாசம் பாராட்டாமல் பழகுகின்றோம். கொஞ்சம் நெருக்கமாகப் பழகும்போது அவர்களைப் புரிந்து கொள்கிறோம். அவர்கள் எதிர்ப்பாலாக இருந்தால் சிலசமயம் அவர்கள்மீது எங்களுக்கு ஒரு வகை ஈர்ப்பு எற்படுகின்றது. இருவருக்கும் நல்ல புரிந்துணர்வோடு ஒருவர்மேல் மற்றவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டால் அதைச் சந்தர்ப்பம் பார்த்து வெளிப்படுத்துகின்றோம். இதுதான் காதலாகிறது. அந்தக் காதல்தான் அடுத்த கட்டத்திற்குச் சென்று காதல் திருமணமாகிறது. ஏதாவது காரணங்களால் இந்தக் காதல் தடைப்பட்டும் போகலாம். எங்களுடைய இந்தக் கலாச்சாரத்தைத்தான் இவள் தவறாகப் புரிந்து கொண்டு எடுத்ததற்கெல்லாம் டேற்ரிங் என்கிறாளோ என நினைக்கத் தோன்றியது.

வழக்குச் சம்பந்தமாக அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். மீண்டும் ஒருதடவை சந்தித்துக் கொண்டோம். நீதிமன்றத்தில் வழக்கு எடுக்கப்பட்ட திகதியைத் தொலைபேசி மூலம் அவளுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். கட்டாயம் வருவதாகச் செல்லியிருந்தாள்.

வாகனப்போக்குவரத்து நீதி மன்றத்தில் இந்த வழக்கு எடுக்கப்பட்டபோது சொன்னபடியே அவளும் அங்கே வந்திருந்தாள். பனிக்காலமாகையால் வீதிப்பாதுகாப்பு காரணமாக மெதுவாகவே வண்டிகள் ஊர்ந்தன என்பதை முக்கிய காரணமாக எடுத்து அதை நீதிபதிக்கு விளங்கப் படுத்தினேன். எனது வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொண்டு வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தார். தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாகவே அமைந்திருந்ததால் அவள் முகத்தில் புன்னகை பூத்திருந்தது. இருவரும் நீதிமன்ற அறையைவிட்டு வெளியே வந்து வண்டியை நோக்கி நடந்தோம்.
அருகே வந்து கைகொடுத்து நன்றி சொல்லிவிட்டு கைப்பையை எடுத்தபடி ‘உங்க பீஸ்’ என்றாள்.


‘நான் பெரிதா எதுவம் செய்யவில்லை. எனக்காக வாதாடும்போது உங்களுக்கும் சேர்த்து வாதாடினேன். அவ்வளவுதான்’ என்றேன்.
‘இல்லை வேறுயாரிடமாவது சென்றிருந்தால் நான் பணம் கொடுத்துத்தானே வாதாடியிருப்பேன். இது உங்க தொழில், சொல்லுங்க எவ்வளவு?’ என்றாள்.


‘எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் என்றால் நான் என்ன செய்யிறது. இதை ஒரு கடனாய் நினைச்சால் தாங்க, உங்க மனம் நோகக் கூடாது என்பதற்காக வாங்கிறேன்’ என்றேன்.
‘நானும் உங்க மனசை நோகவைக்கவில்லை. உங்களைப்பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறேன், யூ ஆ ஸோ ஸிமாட் அதனாலே.. நீங்க செய்த இந்த உதவிக்கு ஏதாவது தரணும்..!’


‘விடமாட்டீங்க போல இருக்கே, உங்க இஷ்டம். தருவதை வாங்கிக் கொள்கிறேன்’ என்றேன்.

அவள் அருகே வரவே ஏதாவது பணம் கொடுக்கப்போகிறாள் என நினைத்தேன், ஆனால் அவள் இச் சென்ற ஓசையோடு எட்டி ஒரு முத்தம் கொடுத்தாள். எதிர்பாராத முத்தத்தால் ஒருகணம் நான் உறைந்து போயிருந்தேன். யாராவது பார்த்திருப்பார்களோ என்ற அச்சத்தில் அக்கம் பக்கம் பார்த்தேன். இவ்வளவு விரைவில் அதிகம் பழகாத ஒரு பெண்ணிடம் இருந்து முத்தம் கிடைக்குமா? அவள் இந்த சூழ்நிலையில் வளர்ந்தவள் என்ற துணிச்சலா? எனது சிந்தனையின் இடைவெளியில் அவள் மறைந்து போயிருந்தாள். மூன்றாவது சந்திப்பில் என்ன நடக்குமென்று தெரியும்தானே என்று இதைத்தான் அன்று அவள் சொன்னாளா?


வண்டியில் ஏறி, கண்ணாடியில் கன்னத்தைப் பார்த்தேன். உதட்டுச்சாயம் மெல்லிய கோடாய்ப் பதிந்திருந்தது. இதுவரை இல்லாத, சொன்னால் புரியாத இனிய உணர்வுகள் உடம்பெல்லாம் பரவியது. மறுகன்னத்தையும் காட்டியிருக்கலாமோ என்று ஒருகணம் எண்ணத் தோன்றியது. டேற்ரிங் என்றால் என்னவென்று புரிந்தது போலவும் புரியாதது போலவும் ஒருவித தடுமாற்றமிருந்தது. அடுத்த சந்திப்பு எப்போ கிடைக்கும் என்று மனசு ஏங்கத் தொடங்கியதென்னவோ உண்மைதான். நான் காதல் என்றேன் அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. அந்த நேரம் எல்லாமே ஒன்றுதான் என்பது போல மயக்கமாயுமிருந்தது. அவள் சென்று நெடுநேரமாகியும் அவளது மூச்சுக் காற்று எனது காதுமடலை வருடிக்கொண்டிருந்தது.