Sunday 30 September 2012

கூகிள் தேடலில் தெரிந்திருக்கவேண்டிய ஷாட்கட் கீகள் - 1



கூகிள் தேடல் பற்றி பல ஷாட்கட் கீகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தளங்களுக்கான தேடுதலாக இல்லாமல் கூகிள் தேடல் பொறியில் வைத்தே பல தரவுகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறு செய்வதற்கு சரியான சொற்தொடரை கொடுத்தல் அவசியமாகின்றது.

கூகிளில் நேரடியாக தகவல்களை பெற உதவும் மிகவும் பயனுள்ள சில ஷாட்கட் கீகளின் தொகுப்பு இங்கே. உதாரணத்திற்கு தேடப்பட்ட விடயங்களை அறிய குறிப்பிட்ட சொற்களின் மேலே அழுத்துங்கள்.

1. சினிமா , இசைக் கலைஞர்களின் திரைப்படங்கள் அல்லது இசை ஆல்பங்களை அறிவதற்கு  "[artist] [movies or albums]"  அல்லது  "[artist] songs"  என்று கூகிளில் என்டர் செய்தால் திரைப்படங்கள் அல்லது இசை ஆல்பம் தொடர்பான விடயங்கள் பட்டியலிடப்படும்.

2. திரைப்படங்கள் வெளிவரும் திகதியை அறிவதற்கு "[name of movie or game] release date"
3. பிரபலங்களின் இறந்த திகதியை அறிவதற்கு  "[name of famous person] death," 

4. நகரமொன்றின் சனத்தொகையை அறிவதற்கு  "[city] population." 

5. காலநிலை தெரிந்துகொள்வதற்கு  "weather [city name]" 

6. நேர வித்தியாசத்தை கண்டுபிடிக்க "time [country name]" 

7. Sunrise , sunset தெரிந்துகொள்ள  "sunrise [city name]," அல்லது
8. "sunset [city name]." என்பதை அழுத்துங்கள்.

9. கால்குலேட்டரை செயற்படுத்துவதற்கு அல்லது
10. கால்குலேட்டர் என நேரடியாக டைப் செய்ய வேண்டும்.

fb posted blog ப்ளாக் பதிவுகள் பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்யும்


பேஸ்புக் என்பது மிக முக்கியமான சமூக வளைத்தளம். இதன் மூலம் நமக்கு நிறைய வாசகர்கள் வருவார்கள் மேலும் நம்முடைய நண்பர்கள் எளிதாக நம் பதிவை பற்றி அறிந்து கொள்ள உதவுவது பேஸ் புக் ரசிகர் பக்கம்.

அனைவரும் ரசிகர் பக்கம் வைத்திருப்பீர்கள் ஆனால் நாம் பதிவு எழுதிவிட்டு அதை நமுடைய ரசிகர் பக்கத்திலும் ஷேர் செய்வது என்பது கடினமான வேலை ஆகும். சில நேரங்களில் நம்முடைய பதிவை பகிராமல் கூட விட்டு விடுவோம்.

இப்பொழுது அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் எளிமையாக தானாகவே பதிவை ஷேர் செய்வது எப்படி என்று பார்போம்.

1. முதலில் எப்படி தொடங்குவது 
பேஸ்புக் கில் உங்களுடைய அக்கௌண்டில் உள்ளே நுழைந்து கொள்ளுங்கள். உள்ளே சென்றதும் கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்யவும்.

http://apps.facebook.com/rssgraffiti/ இதை கிளிக் செய்ததும் உங்களுடைய பேஸ்புக் அக்கௌன்ட் டை rss graffiti 2.0 பயன்படுத்த அனுமதி கேட்கும். allow என்பதை கிளிக் செய்யவும்.


2. உங்களுடைய ப்ளாக் பெயர் கொடுத்து கிளிக் Create Publishing Plan என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது ஒரு pop up விண்டோ வரும்.



3. Sources என்ற இடத்தில உள்ள Add New என்பதை கிளிக் செய்யவும்.



4. enter URL என்ற இடத்தில் உங்களுடைய வலைப்பூவின் Feed URL ஐ கொடுக்கவும். கொடுத்து Add Source என்பதை கிளிக் செய்யவும்.





5. அதை கிளிக் செய்ததும் அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுடைய ப்ளாக் தலைப்பு Feed Title என்ற இடத்தில முதலில் வரும். Source URL Override என்ற இடத்தில் தேவை என்றால் ப்ளாக் வெப் அட்ரஸ் கொடுக்கவும். உங்களுக்கு தேவையான அளவு Scheduling செட்டிங்க்ஸ் செய்து save கொடுக்கவும்.


.

6. இப்பொழுது உங்கள் பக்கம் கீழே உள்ள வாறு தோன்றும். இதில் target Add New என்பதை கிளிக் செய்யவும்.





7. இதில் Choose Target கீழே உள்ள இடத்தில் உங்களுடைய ரசிகர் பக்கத்தை தேர்வு செய்து அடுத்து  Publish on Behalf of  என்ற இடத்தில் யாராக உங்களுடைய பதிவுகள் பகிர வேண்டும் என்பதை செலக்ட் செய்யவும். இறுதியாக Save changes என்பதை கிளிக் செய்யவும்.





8.இப்பொழுது இறுதியாக வரும் பக்கத்தில் off என்று உள்ளதை கீழே உள்ளது போல் on என்று வைக்கவும்.




இனிமேல் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அப்டேட் தானாகவே உங்களுடைய பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் ஆகிவிடும்.

பிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா? naming companys



நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் நிறுவனங்களின் பெயர்கள் உலகளவில் பிரபலமாக இருக்கும் .அதன் பெயர்  காரணங்களினாலே சந்தையில் அதன் அனைத்து பொருட்களின்  மதிப்பும் உயர்ந்தே இருக்கும். அது போன்ற நிறுவனங்களின் பெயர் காரணங்களை இப்பொழுது பார்ப்போம்.


௦01.கேனன் ( CANON ) :




மிகவும் பிரபலமான இந்நிறுவனத்தின் ஆரம்பக்கால பெயர் பிரிசிசன் ஆப்டிகல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்  லேபரட்டரி என்பதாகும். இந்நிறுவனமானது  புகைப்படக் கருவி(CAMERA ) தயாரிப்பில் சிறந்த நிறுவனமாகும்.இவைத்தான் ஜப்பான் நாட்டில் முதல் முதலாக 35மிமீ  போகல் பிளேன்  ஷட்டர் கேமராவினைத்  தயாரித்து வெளியிட்டனர் .அந்த கேமராவின் பெயர்  க்வானன் (KWAN NON ) என்பதாகும். ஜப்பானிய  மொழியில் புத்தருடைய போதி   தத்துவ கருணை  என்ற பொருள் தரும் இதனையே சிறிதுக்காலம் கழித்து சிறிய மாற்றம் செய்து கேனன் (CANON) என்ற பெயரினை இந்நிறுவனத்திற்கு வைக்கப்பட்டது.

02. ஹிடாச்சி  (HITACHI )





இந்நிறுவனம் எலக்ட்ரானிக் துறையில் புகழ் பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் தொலைக்காட்சி பெட்டி ,ஸ்கேனர் ,குளிர்சாதனப்  பெட்டி, ஏ.சி மற்றும் கணினி பாகங்கள்  என இதன் சந்தைப்பொருட்களின்  பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

ஜப்பான் மொழியில் ஹிடாச்சி என்பது சூரிய உதயம் என்ற பொருளினை தருகின்றது. இந்நாடு சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படுவதால் இந்நிறுவனத்தின் பெயரையும் அதனை சார்ந்தே வைக்கப்பட்டுள்ளது.மேலும் ஜப்பானியர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் குறிக்கும் வகையில் இந்நிறுவனம் ஹிடாச்சி என பெயர் சூட்டியுள்ளனர்.

03.அகாய்  ( AKAI )

பொதுவாக ஜப்பான் நிறுவன தயாரிப்புக்களில்  பெரும்பாலும்  எலக்ட்ரானிக் வகையான பொருளாகத்தான் இருக்கும். அதன் வரிசையில் இந்த இந்நிறுவனமும் பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து உலகம்  முழுவதும் சந்தையிட்டுள்ளது. இதன் பெயர்க்  காரணத்தை இப்பொழுது காணலாம்.



அகாய் என்றால் ஜப்பானிய மொழியில் சிகப்பு வண்ணத்தை குறிக்கும் சொல்லாகும். சூரிய உதயத்தின் போது ஏற்படும் சிகப்பு வண்ணமானது இந்நாட்டின் அனைத்து இடத்திலும் இடம்பெறுகிறது. இந்நாட்டின் தேசிய கொடியின் மையப்ப் பகுதியில் இந்த சிகப்பு வண்ணத்தை குறிக்கும் வகையில் தான் சிகப்பு நிற  வட்டம் இடம்பெற்றுள்ளது.மேலே கூறியதுபோல் ஜப்பான் சூரியன் உதிக்கும் நாடு என அழைக்கப்படுகிறது ,ஏனெனில் உலகின் கிழக்கு மூலையில் உள்ள நாடு ஜப்பான் . எனவே இந்த சிகப்பு நிறத்தை குறிக்கும் வகையிலேயே இப்பெயரினை இந்நிறுவனத்துக்கு வைத்துள்ளனர்.

04. கேசியோ ( CASIO ) :




இந்நிறுவனமும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முதன்மை பெற்று விளங்குகின்றது. மேலும் இந்நிறுவனம் தொழிற்சாலை உபகரணங்களை வடிவமைப்பதினை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது. இவை பல வகையான எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் கணிப்பான் (Calculator), இசை விசைப்பலகை (Music Keyboard) மற்றும் அழகிய கைக்கடிகாரம் (Watches) போன்றவை ஓயரபலமானவை ஆகும்.

இந்நிறுவனத்தை  டடாயோ கஷியோ    என்பவர்த்தான் நிறுவினார் . எனவே இவரின் பெயரில் வரும் கஷியோ ( Kashio ) என்பதை சிறு மாற்றம் செய்து
கேசியோ ( CASIO ) என்ற பெயரினை இந்நிறுவனத்திற்கு பெயராக வைத்தனர்.

05.பிளாபங்க்ட்  ( BLAUPUNKT ) :




இந்நிறுவனமானது ஜெர்மனியின் பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் முன்னனி நிறுவனம் . பிளாபங்க்ட்  ( BLAUPUNKT ) என்பது ஜெர்மன் மொழியில் நீல நிறப்புள்ளி அல்லது நீல நிற முனை என்ற பொருளை தருவதாகும். முதலில் இந்த நிறுவனத்துக்கு ஐடியல் (IDEAL) என்ற பெயரே வைக்கப்பட்டது . இங்கு ஆரம்பக்காலங்களில் ஹெட்போன்கள்  தயாரிக்கப்பட்டன . அவற்றின் தரத்தை சோதித்த பின்னர் விற்பனைக்கு   அனுப்பப்படும் முன்னர் அதில் நீல நிறப் அடையாளக் குறியிடப்படும். இவை வழக்கத்தில் சரியான தன்மையின் அடையாளமாக கருதப்பட்டதால் இவை நாளடைவில் இந்நிறுவனத்தின் டிரேட் மார்க்காக மாறியது. பின்னர் இந்நிறுவனத்தின் பெயராகவும் இதனை மாற்றி அமைத்தார்கள்.

06. எப்சன் (EPSON)



இந்நிறுவனம் பிரபலமான அச்சுப்பொறி (PRINTER) மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்.இதன் பெயர் காரணம் சற்று வினோதமான  நிகழ்வாகும். இந்நிறுவனமானது 1942 -ம்  ஆண்டு  ஹிசாஓ யமஸகி  என்பவரால்  தைவா கோக்யோ (DAIWA KOGYO) என்ற பெயருடன் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் முதலில் நகனோ  என்ற இடத்தில் கடிகாரத்துக்கு தேவையான பாகங்களை தயாரித்து விற்பனை செய்தது. பின்னர் இதன் பெயர் 1968-ம் ஆண்டு ஷின்சு செய்கி என்ற பெயரினை பெற்றது.
பெயர் மாற்றம் செய்த அந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் முதல் மினி பிரிண்டர் தயாரித்து விற்பனைக்கு வந்தது. இந்த பிரிண்டரை E P 101(E P- Electronic Printer 101) என அழைக்கப்பட்டது. 1975-ம்  ஆண்டு இரண்டாவது பிரிண்டர்  புதிய வடிவமைப்புடன் தயாரித்து வெளியிடப்பட்டது.

இதனை முதலில் வெளியிடப்பட்ட பிரிண்டரின் மகன் (Son  of  EP -101) என அழைத்தனர். இதுவே பின்னர் Son of  EP  என அழைக்கப்பட்டது. இதனை மீண்டும் சிறு மாற்றம் செய்து " EPSON " என இந்நிறுவனத்தின் பெயரை அழைத்தனர்.

07.காம்பேக் (COMPAQ) :



இந்நிறுவனம் சிறந்த கணினி, மடிக் கணினி மற்றும் பல  எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்புக்கள் சந்தையில் மிகவும் பிரபலமானவை. இந்நிறுவனம் USA -ல்  பிபரவரி -1982 ல்  தொடங்கப்பட்டது. அன்று முதல் பல கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பில்  வெற்றிகரமான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது .

இவை இணைவமைதியுடன் நல்ல திறனுடன் இயங்கும் என்பதினைக் குறிக்க ஆங்கிலத்தில் Compatibility and Quality  என அழைப்பார்கள். இந்நிறுவனம் இந்த இரண்டு சொல்லையும் இணைத்து CAMPAQ   என ஒரு புதிய சொல்லை உருவாக்கி தன நிறுவனத்திற்கு பெயராக வைத்தனர்.

08.சோனி (SONY)






இந்நிறுவனம் உலகபுகழ் பெற்ற எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம்.இவை தயாரிக்காத எலக்ட்ரானிக் பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தனது அனைத்து தயாரிப்புகளையும் சந்தையில் வெளியிட்டுள்ளது.  இதனை உருவாக்கியவர் ஜப்பானை சேர்ந்த திரு அக்யோ மொரிட்டா என்பவர். இவர் 1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்கா என்பவரின் உதவியுடன் “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். இன்நிறுவனமானது டேப் ரெக்கார்டர் தயாரிப்பில் சிறந்து விளங்கியது . இவரது கண்டுபிடிப்பான டேப் ரெக்கார்டர் அளவில் பெரியதாக இருந்தது. பின்னர் அமரிக்காவின் தொழில்நுட்ப உதவியுடன் கையடக்க டேப் ரெக்கார்டரை உருவாக்கினார். 

அதன் பின் தனது தயாரிப்பினை பிரபலப்படுத்த விரும்பி தனது நிறுவன பெயரை அனைவரிடமும் சென்றடையயும் வகையில் மாற்றி அமைக்க  விரும்பி இலத்தீன் மொழியில் உள்ள சோனஸ் என்ற பெயரையும் , அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும்  இணைத்து  தனது நிறுவன பெயரை 1958-ல்  " சோனி " (SONY) 
கார்ப்பரேஷன்  என்று பெயரை மாற்றினார். இதில்  சோனஸ் என்றால்  இலத்தீன் மொழியில்  "ஒலி" என்று பொருள். இப்பெயரானது இன்று உலக புகழுடன் வளம்  வந்துகொண்டிருக்கின்றது.
மேலே பகிர்ந்தவை பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை...

நன்றியுடன்
 
 

with out net இணைய இணைப்பு இல்லாமல் இணையத்தை அணுகுவது எப்படி?




இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம். இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம். இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை பெறலாம்.


உதாரணத்திற்கு உடனடியாக டேக்ஸி தேவைப்படுகிறதென்றால், இது சம்மந்தமானவர்களின் மொபைல் எண் தேவைப்படும். அப்படி மொபைல் எண் எதுவும் இல்லை என்றால் இன்டர்நெட் வசதி கொண்டு தேடுவது வழக்கம்.

இந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி இல்லை என்றால் பிரவுசிங் சென்டருக்கு சென்று தேடி கொண்டிருக்க முடியாது. இது போன்ற தருணத்தில் டேக்ஸி என்று டைப் செய்து, பின்னர் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்தின் பெயரையும் டைப் செய்து, 9773300000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இப்படி அனுப்பினால் உடனடியாக கூகுளிலின் பட்டியலில் இருந்து டேக்ஸி வழங்கும் சில நிறுவனங்களின் மொபைல் எண்களும், முகவரிகளும் உங்கள் மொபைலிற்கு மெசேஜ் மூலம் தகவல் கிடைக்கும். இந்த பட்டியலில் எந்த நம்பரை தேர்வு செய்து கொள்கிறோமோ அதை தேர்வு செய்து, பின் போன்கால் செய்து டேக்ஸி வசதிக்கு அனுகலாம்.
இது போன்று தகவல்களை கூகுளில் இன்டர்நெட் இருந்தால் தான் பெற முடியும். ஆனால் அவசர தேவைக்காக கூகுள் இந்த சேவையை வழங்குகிறது.

கணிபொறி மற்றும் ஸ்மார்ட் போன்களை விற்பதற்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான 4 செயல்கள்


          உங்களுடைய கணினியை நீங்கள் மற்றவர்க்கு விற்கும் பொழுது செய்ய வேண்டிய முக்கியமான 4 செயல்களை பற்றி பார்போம். அதற்கு முன்னர் ஏன் செய்ய வேண்டும் என்பதை சொல்லி விடுகிறேன்.


உங்களுடைய கணினியில் உங்களுடைய பல சொந்த தங்கவல்கள் பதிந்து வைத்திருப்பீர்கள், உங்களுடைய account password கூட பதிந்து வைத்திருக்கலாம், இது போன்ற நிறைய உங்கள் சொந்த தகவல்கள் அதில் இருக்கலாம் அதனால் முக்கியமாக இதை செய்யுங்கள்.



Backup
நீங்கள் கேட்கலாம் நாங்கள் விற்கும் பொழுது Backup எடுத்து விட்டு தானே விற்க போறோம் என்று, நீங்கள் உங்களுடைய தகவல் களை மட்டும் Backup செய்வீர்கள், அதற்கு பதிலாக உங்களுடைய முழு disk கையும் image Backup எடுத்துகொல்லுங்கள். இது உங்களுடைய புக்மார்க் மற்றும் சில சாப்ட்வேர் செட்டிங்க்ஸ் களை செய்வதற்கு உதவும்.

Secure Format:
உங்களுடைய கணிணியை பார்மட் செய்து விடுங்கள், நீங்கள் உங்களுடைய தகவல்களை அழித்திருந்தாலும் அவற்றை Recovery Software மூலம் எடுத்து விட முடியும் அதனால் உங்களுடைய கணிணியை Format செய்து விடுங்கள்.

De-authorise
உங்களுடைய Smart phone மற்றும் computer ரை ஒரு சில அக்கௌன்ட் உடன் இனைதிருபீர்கள், அதை  De-authorise செய்து விடுங்கள், ஏன் எனில் அவற்றின் மூலம் உங்கள் அக்கௌன்ட் குள் செல்ல வழி உள்ளது.
Saved Password in Smart Phone:
ஸ்மார்ட் போன் களில் உள்ள பதிந்து வைத்துள்ள அணைத்து தகவல்களையும் மறக்காமல் அழித்துவிடுங்கள், ஸ்மார்ட் போன் களில் உள்ள தகவலகலையும் Backup செய்துகொள்ளுங்கள். முக்கியமாக personal video களை அளித்து விடவும். 

இதற்கு மேலும் ஏதேனும் தகவல் இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.
 by

நம் வாழ்க்கை! நம் கையில்!! our our life is our our hand



வாழ்வில் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் தடைகள் என்பது நிச்சயம் உண்டு. அதனை தவிர்க்கவும் முடியாது விட்டு விலகவும் முடியாது. வாழ்க்கையில்தான் என்பதில்லை அது ஆன்மீகமாக இருக்கலாம் அல்லது அரசியலாகவும் இருக்கலாம். எந்த ஒரு செயலுக்கும் இது பொருந்தும்.




ஆனால்  தவறான கோட்பாடுகள், கருத்துக்கள் கடும் விஷத்தை விட மிகவும் மோசமானவை என்பதை  பல சந்தர்ப்பங்களில் நாம் உணர்வதில்லை.இதனை நாம்  ஏற்றுக்கொள்ளவும்  தயங்குகிறோம் .

ஒருசின்ன நீதிக்கதை  
ஒருமுறை  சாத்தான் தான்  செய்து வந்த வியாபாரத்தை விட்டுவிட நினைத்தது. தமது வியாபார பொருட்களை எல்லாம் விற்றுவிட எண்ணி 'இவை விற்பனைக்கு'   என்று எழுதிவைத்தது. இதில் கோபம்,பொறாமை , வெறுப்பு, சுயநலம்,பேராசை மற்றும் ஆணவம்  போன்றவைகள் அடங்கும்.இப்படி பல பொருள்கள் விற்பனைக்கு வந்ததில் மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கி சென்றனர்.

ஆனால் தம்மிடமே இரண்டு பொருட்களை விற்காமல் வைத்து கொண்டது. இதனை பார்த்த மக்கள் "இதனை ஏன் விற்பனைக்கு வைக்கவில்லை ? என கேட்டனர். அவை "விற்பனைக்கு அல்ல" என சாத்தான் கூறியது. அவ்விரண்டு மன அழுத்தமும் , உற்சாகம் இழப்பதுதான் அது.சாத்தானும் அதனை மக்களிடம் கொடுக்க விரும்பவில்லை. சாத்தான் விற்பனைக்கு வைக்காத அவ்விரு பொருட்களையும் கூட நம்மில்  பலரும் பெற்றுள்ளோம் . அதனை நாம் நம் மீதும், மற்றவர்கள் மீதும் அதனை தொடர்ந்து பிரயோகம் செய்கின்றோம்.துரதிர்ஷ்டமாக தன்னை அறிவு ஜீவிகளாக நினைப்பவர்களும் கூட உற்சாகம் இழந்து, மிகுந்த மன அழுத்தத்துடன் வேதனைபடுகின்றனர்.

நம்மால் எதனையும் ஏற்கும் பக்குவம் இன்னும் வளராத காரணமே இந்த அழுத்தத்திற்கு முக்கியகாரணம்.வாழ்க்கையானது தற்போது எப்படி உள்ளதோ,  அதை அப்படியே உணர பழகிக்கொள்ளவேண்டும்.இப்போதைய கணம் எப்படி உள்ளதோ அப்படியே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை ஒரு பெரிய நாட்டின் மன்னன் தனது அமைச்சர்களுடன் நாட்டை வளம் வந்தான். அப்பொழுது அந்த நாட்டின் சிறிய கிராமத்திற்கு செல்ல முடிவெடுத்து அங்கு வந்தான்.அரசன் வருவதை அறிந்த கிராம மக்கள் சிறிது மகிழ்ச்சியும்,பெரும் பயமும் கொண்டனர் ஏனெனில் மன்னனிடம் முட்டாள்தனமாக பேசி அவரின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ என அஞ்சி பக்கத்துக்கு கிராமத்திலிருந்து ஒரு வயதான பெரியவரை  அழைத்து வந்தனர். அவரையே தங்களின் பிரதிநிதியாக நியமித்தனர்.

அப்போது அங்கு வந்த அரண்மனை ஆட்கள் அந்த பிரதிநிதியிடம் "மன்னர் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்பார் அதற்கு மட்டும் பதில் கூறினால் 
போதுமானது என   கூறினார்.முதல் கேள்வி உங்களின் வயது என்ன? அதற்க்கு 70 என கூறவேண்டும் எனவும், இரண்டாவது கேள்வி உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்பார், அதற்கு 5 என கூறவேண்டும் எனவும். மூன்றாவதாக இங்கு மழை எப்படி இருக்கிறது? என்பார், அதற்கு நன்றாக இருக்கிறது என கூறுவேண்டும் " என்றனர் அதற்கு அவரும் சம்மதித்தார்.

இதனை தெரிவிக்கும் விதமாக  அமைச்சர் மன்னரிடம் "மன்னா கிராமமக்கள்  உங்களை காண ஆவலாக உள்ளனர்.அவர்கள் அறியாமையினால் தவறாக பேசினாலும் நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். கிராம பிரதிநிதியிடம் மட்டும் நீங்கள் மூன்று கேள்விகளை கேட்டால் போதுமானது என அந்த கேள்விகளை மன்னரிடம் கூறினார்.மன்னரும் அதற்கு  சம்மதம் தெரிவித்தார்.

கிராமமக்களை சந்தித்த மன்னன் "உங்களின் பிரதிநிதி யார் ? "என கேட்டார். அவரும் எழுந்து சென்றார் .அவரிடம் மன்னன் " உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? "என்றார்.அதற்கு பிரதிநிதி " எழுபது " என்றார். 

பின்பு மன்னன் " உங்களின் வயது என்ன? " என்றார்.அதற்கு பிரதிநிதி "ஆறு" என்று ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டார். கோபம் கொண்ட மன்னர் " உங்களுக்கென்ன பைத்தியமா? " என்றார். அதற்கு பிரதிநிதி " நன்றாக இருக்கிறது " என பதில் அளித்தார். மிகுந்த கோபம் கொண்ட மன்னன் " இவன் சரியான முட்டாள், இவன் எப்படி இக்கிராமத்தின் பிரதிநிதியாக உள்ளான்? " என்றார். அதற்கு அந்த பிரதிநிதி பொறுமையாக " மன்னா பைத்தியம் நான் இல்லை, நீங்கள்தான் நான் சரியாகத்தான் பதில் கூறினேன் நீங்கள்தான் தவறாக கேள்வியினை கேட்டீர்கள்" என்றான்.

இதிலிருந்து தெரிவது என்ன?,நம் மனம் கடந்த காலத்திலே  நின்று கொண்டு செயல்படுகிறது.மனதின் போக்கில் போனால் நாம் குழப்பமாகிவிடுவோம். இது தர்க்க மனதினை பற்றியது.

நாம் எதிர்வாதமாக யோசிப்பது என்றால் , ஒவ்வொரு நாள் காலை  கண் விழித்து   எழுந்தவுடன்  பல் துலக்குகிறீர்கள், காலை கடனை செய்கின்றீர்கள் பின்பு உணவு ,வேலை ,உணவு தூக்கம் என நாம்  ஆண்டுக் கணக்கில்  செய்துகொடுத்தான் இருக்கின்றோம்.

இதனை செய்வதில் என்ன மதிப்பிருகின்றது .இதனையும் மீறி பல அற்புதமான கணநேர  விஷயங்கலும் உள்ளன . சூரியோதயம், வானில் வட்டமிட்டு ரீங்காரம் செய்யும் அழகிய பறவைகள்,தோட்டத்தில் பூத்த புதுமலர், பனியில் நனைந்த பசுமையான புற்கள் மற்றும் மழலை பேசும் குழந்தையின்   முகம் என பல உள்ளது. இவையும் கணநேர விஷயங்கள்தான் இதுபோன்ற கணநேர விஷயங்களால்  இந்த வாழ்க்கை மதிப்புடையதாகவும் எண்ணத் தோன்றலாம். இவை அனைத்தும் அவ்வப்போது ஏற்படும் சாதாரண நிகழ்வுகள்.

தர்க்கரீதியில் என்னும்போதெல்லாம் மனஅழுத்தம் அதிகமாகி நம்மை நாமே காயப்படுதிக்கொல்கிறோம். யாரொருவர் தன்னையும், தனக்கு சாத்தியமான சூழ்நிலையையும் மதித்து நடக்கிறாரோ அவரே அனைத்திற்கும்  மதிப்பளிக்கும் இயல்புடையவராக இருப்பார். 

 எப்படியோ வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டோம். வாழ்வை புரிந்துகொள்வது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கும். அதில் சிக்கலஎன்பது நாமே உருவாக்கிக்கொண்டது. பின்பு நாமே அதற்கான தீர்வை தேடி அலைகின்றோம்.



நாமே திருடனாகவும்,காவல்காரனாகவும் செயல்படுகிறோம்.அப்படியிருக்க திருடன் பிடிபடுவானா?. ஒருபோதும் மாட்டான். நம்முடைய தர்க்க மனமும் அப்படிதான்.

எனவே தர்க்க மனதை சீர்செய்து செயல்பட்டால்தான் நமது வாழ்க்கை சிறப்புறும்.நமது வாழ்க்கை வெற்றிபெறுவது நமது கையில் தான் உள்ளது.

இது ஒரு மகான் அருளிய உபதேசமாகும், இதனை நாமும் வாழ்க்கையில் ஏற்று கடைபிடிப்போம்.

நன்றியுடன்

தண்ணீரில் கைத்தொலைபேசி விழுந்தால் water mobile



நாம் அடிக்கடி செய்திடும் ஒரு காரியம் நம் கைத்தொலைபேசியை தண்ணீரில் போடுவது. குளியலறைகளுக்கும் எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.

அவ்வாறு விழுந்த பின் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்:

1.முதலாவதாக போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். கைத்தொலைபேசி கவர், பற்றரி கவர், பற்றரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.

2. அடுத்து கைத்தொலைபேசியில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து நீரை உறிஞ்சி எடுக்கவும். முழுவதுமாக உலர செய்திடவும்.

3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால் அதனை எடுத்து கைத்தொலைபேசியை மீதாகப் பயன்படுத்தி ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக பற்றரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும்.

இவ்வாறு உலர வைக்கையில் ஹேர் ட்ரையரை கைத்தொலைபேசிக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது கைத்தொலைபேசியின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலர வைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.

இந்த வேலையை மேற்கொள்கையில் கைத்தொலைபேசியை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.
இதே போல பற்றரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.

நன்றாக உலர்ந்த பின்னர் காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர் பற்றரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில் இன்னும் சில மணி நேரம் காத்திருந்து ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும்.

அதன் பின்னரும் இயங்கவில்லை எனில் கைத்தொலைபேசியை சரி செய்திடும் பணியாளரிடம் சென்று நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.

திருவள்ளுவரின் நான்கடி பாடல் தெரியுமா? 4 word valluvar



ஒன்றரையடி  குறளின் மூலம் இவ்வுலகை தெளிவுறச் செய்ய குரல் தந்த மகான் தெய்வப்புலவர்  திருவள்ளுவர்.இவர் 1330 ஒன்றரை அடி குறளின் மூலம் பல ஆழ்ந்த சிந்தனைகளையும் , கருத்துகளை மக்களுக்காக தந்தவர்.

திருவள்ளுவர் சிலை
 உலகில் உள்ள அத்தனை உயிரினத்துக்காக ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒருவருக்கு  மட்டும்  நான்கடியில் ஒரு பாட்டு  எழுதியுள்ளார் . யார் அந்த பெருமைக்குரியவர்? வேறுயாருமில்லை அவரது மனைவிக்காகத்தான் அந்த பாட்டினை எழுதினார். அந்த தெய்வ புலவரின்  துணைவியாரின்  பெயர் வாசுகி அம்மையார்.


அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு விமர்சனமும் செய்ததில்லை.ஏனெனில் அவர்  கணவர் மீது அளவு கடந்த நம்பிக்கையும் பாசமும் வைத்திருந்ததே காரணம். தனது கணவர் செய்யும் எந்த செயலும் நிச்சயம் அது சரியாகத்தான் இருக்கும் என்று  நினைத்தவர். தனது  கணவர் உணவு உண்ணும் போது ஒரு சிறிய ஊசியினை கையில் வைத்திருப்பார். அவர் உண்ணும் போது கீழே சிந்தும் உணவு பருக்கையினை அந்த ஊசியின் மூலம் குத்தி பின்பு தண்ணீர் நிரம்பிய குவளையில் போடுவார். பின்பு தண்ணீரினை வடித்து விட்டு பின்பு அதனை தனது சாப்பாட்டுடன் கலந்துகொள்வார். இதற்கான காரணத்தை  அந்த அம்மையார் தனது  கணவராகிய திருவள்ளுவரிடம், தாம் இறக்கும் தருவாயில்  தான்  கேட்டு  தெரிந்துகொண்டார்.

திருவள்ளுவரின் இல்லத்திற்கு துறவி ஒருவர் வந்தார். அவரை இன்முகத்துடன் வரவேற்று இருக்கையில் அமரச் செய்தார். பின்பு  இருவரும்  பழைய சாதம் உண்டனர். அப்போது வள்ளுவர் தனது  மனைவி வாசுகியிடம்  "சாதம் சூடாக உள்ளது விசிறிவிடு" என்றார்.

நாமாக இருந்தால் " பழைய சாதம் எப்படி சுடும் " என்ற கேள்வியினை கேட்டிருப்போம்.

ஆனால் வாசுகி அம்மையார் அதுபோன்று எந்த கேள்வியினையும் கேட்கவில்லை கணவரின் சொல் படி விசிற ஆரம்பித்துவிட்டார்.  இதனால் அம்மையார் ஏதும் அறியாதவர் என்ற அர்த்தமில்லை,தனது கணவர் கூறினால் அதில் நிச்சயம் ஆழ்ந்த பொருள் இருக்குமமென நம்பினார். வள்ளுவர் இதன் மூலம் நிருபித்தது என்னவெனில் வாதம் செய்யாமல் விட்டுகொடுக்கும் மனப்பான்மையை தனது துணைவியார் பெற்றிருந்தார் என்பதே.

வாசுகி அம்மையார் ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளுவர் அவரை அழைத்தார். உடனே அம்மையார் கிணற்றுக்கயிற்றினை  விட்டுவிட்டு சென்றார். ஆனால் அந்த கயிற்றுடன் கூடிய குடம் கிணற்றில் விழாமல் அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால் நிச்சயம் அந்த கணவன் பாக்கியசாலி தான். இப்படிப்பட்ட வள்ளுவரின் துணைவியார் வாசுகி அம்மையார் ஒருநாள் உடல்நிலை குறைவால் இறந்துபோனார்.

இந்த உலகிற்கே தனது குறள்  வரியின் மூலம்  பலம் சேர்த்தவர்
      
          " நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
            பெருமை  உடைத்துஇவ் வுலகு "                                                                           

என்ற குறள் மூலம்  அறிவுரை வழங்கிய  தெய்வப்புலவர் தனது மனைவி வாசுகியின் பிரிவினை தாங்காமல் கலங்கிவிட்டார்.

இந்த குறளின்  பொருள் என்னவெனில் " நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பதுதான் இந்த உலகிற்கே பெருமை" என்பதாகும். ஆகையால் அம்மையாரின் பிரிவினை அவர் இயற்கையின் நியதியாக எடுத்துக்  கொண்டிருக்க வேண்டும். ஆனால் அம்மையாரின் பிரிவினை தாங்காமல்,

"அடியிற்கினியாளே அன்புடையாளே 

படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி 

பின்தூங்கி  முன்னெழும்பும் பேதாய் - இனிதா [அ]ய் 

என்  தூங்கும்  என்கண்  இரவு" 

-  என்று அவரின் பிரிவை  நினைத்து நாலுவரி  பாட்டெழுதினார். இந்த பாட்டு வரியின் பொருள் என்னவெனில்
" அடியவனுக்கு இனியவளே!  அன்புடையவளே ! என் சொல்படி நடக்க தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே ! பின்  தூங்கி முன் எழுபவளே! பேதையே!  என் கண்கள் இனி எப்படிதான் இரவில் தூங்கப் போகிறதோ! " என்பதுதான் இப்பாடலின் பொருளாகும்.

எவ்வளவு  அருமையான இல்லறத்தை வாசுகி அம்மையார் நடத்தியிருந்தால், அவ்வளவு பகுத்தறிவு சிந்தனையை தந்த வள்ளுவர் அவரின் பிரிவுக்காக வருந்தியிருப்பார்.



இன்றைய காலங்களில் தேவையில்லாத சிறு சிறு காரணங்களால்  கணவன்,மனைவி இடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு,வாக்குவாதம் பெருகி திருமண முறிவு  ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் இன்று எதனை விவாகரத்து வழக்குகள் உள்ளன நமது குடும்ப பெருமையினை நீதிமன்றங்களில்  விவாகரத்து என்ற பெயரில் புதைத்து  விடுகின்றோம்.  இது தேவையா?




"மனையாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
 எனைமாட்சித் தாயினும் இல்" - குறள்-52

வள்ளுவர்,வாசுகி அம்மையாரின் வாழ்க்கையினை நமது மனதில் நிறுத்தி
குறைந்தபட்சமாவது ஒற்றுமையுடன் வாழ முயற்சிப்போம்.



நன்றியுடன்