Monday 11 February 2013

அறிந்து கொள்வீர்.

விடுதலைக்குப் பிறகு வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்பின் விலை 3.5அணா.21.11.47ல் வெளியிடப்பட்ட இதில்,'ஜெய்ஹிந்த்'என்று பொறிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப்பட்டது,1.7.1852ல்.விலை அரை அணா.
******
கண் இமைகள்,வியர்வைத் துளிகள் கண்ணுக்குள் விழாமல் காக்கின்றன.
******
'வைரஸ்'என்ற சொல்லுக்கு லத்தீன் மொழியில் 'விஷம்'என்று பொருள்.
******
துருக்கி நாட்டின் தலை நகரான இஸ்தான்புல்லில்தான் உலகிலேய அதிகமான மசூதிகள் உள்ளன.அவற்றின் எண்ணிக்கை 444.
******
'ஆல்காக்கள்'என்ற சிவப்பு நிற கடல் தாவரம் அதிக அளவில் உள்ளதால்தான் செங்கடல் சிவப்பாகத் தெரிகிறது.
******
நமது பூமி சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கிரகம்.விண்ணிலிருந்து பார்த்தால் பூமி நீல நிறத்தில் தெரியும்.யுரேனஸ் கிரகம் நீலமும் பச்சையும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும்.
******
செவ்வாய் கிரகத்துக்கு என்று தனியாக ஒரு சந்திரன் உண்டு.அது தினமும் இருமுறை தோன்றும்.அதன் பெயர் டைமோஸ்.
******
இந்தியாவில் முதல் முதலாக பஞ்சாயத்துத் தேர்தல் நடந்த ஆண்டு--1926
******
சிலி நாட்டிலுள்ள கலாமா என்ற இடத்தில் இதுவரை மழை ஒரு துளி கூட விழுந்ததில்லை.உலகிலேயே மிக வறண்ட பகுதி இதுதான்.
******
கி.மு.700 ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட தட்சசீலப் பல்கலைக் கழகம் தான் உலகிலேயே முதலில்  உருவான பல்கலைக் கழகம்.இங்கே பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்தார்கள்.சுமார் அறுபது துறைகள் இதில் இயங்கின.
(******

No comments:

Post a Comment

THANK YOU