Thursday 7 February 2013

பேராசை பெரும் நஷ்டம்.

ஒர் ஊரில்நடுத்தர வசதிள்ள இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். விவசாயம் செய்து தன் பிழைப்பை ஓட்டியவன்தானும் பணக்கரனாக வேண்டும்பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. பாடுபட்டு சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்துபல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென என்ணினான்.ஒரு நாள் அவன்பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு சென்று கொண்டிருந்தான். பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப் படாமல் கிடந்ததை பார்த்தான். அவ்வூர் தலைவருக்கு சொந்தமான அந்த நிலம் விவசாயத்திற்கு சிறந்ததெனவும்மலிவான விற்பனைக்கு உள்ளதாகவும் ஊர் மக்கள் தகவல் கொடுத்தார்கள்.ஊர் தலைவரை காணச் சென்ற அவன்நிலத்தை வாங்குவதற்கான தன் விருப்பத்தைக் கூறினான். ஊர் தலைவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.நீ ஓடிவிட்டுத் திரும்பும் வரை எவ்வளவு துரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கான நிலத்தை நீ எடுத்துக் கொள்”, எனக் கூறினார் ஊர்த் தலைவர்.இதைக் கேட்ட இளைஞன் மகிழ்ச்சியடைந்தான். சிறிது காலத்தில் தான் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில் பல கற்பனைகளை பறக்க விட்டான்.
மறுநாள் காலையில்இளைஞன் தனது லட்ச்சியத்தை அடைய எடுக்கப் போகும் முயற்ச்சியைக் காண ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். ஊர் தலைவர் ஜூட்’ சொல்லியவுடன் தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான். பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருந்தான்
உச்சி வெயில் சுல்லென்று அடிப்பதையும் பொருட்படுத்தாமல் ஓடினான். (ஓடினான் ஓடினான்வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்). சூரியன் மறைவதற்குல் ஓடியவன் வந்துவிடுவானா இல்லையா என்ற சந்தேகமே எற்பட்டு விட்டது ஊர் மக்களுக்கு. மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்க சிறிது தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனை கண்ட ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினர்.
அவனது உடல் வழுவிழுந்திருந்தது. கால்கள் தள்ளாடியது. மூச்சு திணரியதால் அடுத்த அடி எடுத்து வைக்கச் சிரமப் பட்டவன்திடிரென கீழே விழுந்து உயிர் துறந்தான்.
இவ்வளவு தூரம் ஓடி பல நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தவனுக்குகடைசியில் மிஞ்சியது அவனை புதைபதற்கான ஒரு பிடி மண் மட்டுமே.

No comments:

Post a Comment

THANK YOU