Saturday 30 June 2012

படிக்கும் மேசையை எப்படி அலங்கரிக்கலாம்?அந்த அளவுக்கு அறையையும், மேசையையும் அலங்கரிக்க சில எளிமையான வழிகளை வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் கூறுகின்றனர்.

படிக்கும் மேசையை எப்படி அலங்கரிக்கலாம்?

குழந்தைகள் படிக்கும் அறையானது மிகவும் அமைதியாக சத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். படிக்கும் அறையில் இருக்கும் மேசை அழகாக அலங்கரித்து இருந்தால், அது மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். அதுவும் அந்த அறையையே நமக்கு பிடித்தவாறு அலங்கரித்து இருந்தால், சொல்லவே வேண்டாம் அந்த அறையிலேயே கூட தங்கி விடுவோம். அந்த அளவுக்கு அறையையும், மேசையையும் அலங்கரிக்க சில எளிமையான வழிகளை வீட்டு உள் அலங்கார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ideas decorate the study table
2. பேனாவை வைக்கும் ஸ்டான்டானது பல வகைகளில் மரக்கட்டை, கண்ணாடி, பிளாஸ்டிக் என்றெல்லாம் உள்ளது. வேண்டுமென்றால் அந்த ஸ்டான்டை கலர்கலரான பேப்பரில் செய்து வைக்கலாம். பெரும்பாலும் கண்ணாடி/பிளாஸ்டிக் ஸ்டான்ட் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் கண்ணாடி என்றால் அதில் பெயிண்டிங் செய்து அழகுபடுத்தலாம். பிளாஸ்டிக் என்றால் அதில் ஏதேனும் குழந்தைகளைக் கவரும் ஸ்டிக்கரை ஒட்டலாம்.
3. புத்தகங்களை அழகாக அடுக்கி வைக்கலாம். கதை புத்தகங்களை ஒரு ரேக்கிலும், பள்ளி புத்தகங்களை ஒரு ரேக்கில் என்று தனித்தனியாக அடுக்கி வைத்தால், புத்தகங்களை தேட அவசியம் ஏதும் இல்லாமல், சீக்கிரமாக எடுக்கலாம்.
4. மேலும் படிக்கும் அறையில் கலர்கலரான ஸ்டிக்கரை ஒட்டலாம். அந்த ஸ்டிக்கரானது படிப்பிற்கு சம்பந்தப்பட்டதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். மேசையின் மீதும் அழகான ஸ்டிக்கரை ஒட்டலாம். குழந்தைகளுக்கு எழுதுவது மிகவும் பிடித்தால், சுவற்றில் வெள்ளை அல்லது கறுப்பு போர்டை மாட்டி விடலாம்.
5. முக்கியமான ஒன்று அறையில் இருக்கும் நாற்காலி. படிக்கும் அறையில் பயன்படுத்தும் நாற்காலியானது குழந்தைகளுக்கு முதுகு வலி வராமல் இருக்க வேண்டும். அந்த நாற்காலியையும் அழகாக குஷன் போட்டு, அந்த நாற்காலிக்கு கவர் போட்டும் அலங்கரிக்கலாம்.
இவ்வாறெல்லாம் செய்தால் படிக்கும் அறையானது அழகாக, குழந்தைகளுக்கு படிக்கும் ஆசையையும் தூண்டும் என்றும் கூறுகின்றனர் நிபுணர்கள். நீங்களும் செய்து பாருங்களேன், உங்கள் குழந்தையும் விருப்பத்தோடு ஆவலாக படிக்கும்.

Friday 29 June 2012

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்



பதவியில்
ஜூலை 25, 2002 – ஜூலை 25, 2007
உதவி தலைவர் பைரோன் சிங் செகாவத்
முன்னவர் கே. ஆர். நாராயணன்
பின்வந்தவர் பிரதிபா பாட்டீல்

பிறப்பு அக்டோபர் 15, 1931 (அகவை 80)[1]
இராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா
வாழ்க்கைத்
துணை
திருமணம் புரியவில்லை
சமயம் இசுலாம்
ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுத சோதனையான பொக்ரான்-II (1998) சோதனையில் முக்கியப் பங்கு வகித்தார். முதல் அணு ஆயுத சோதனை 1974-ல் நடத்தப்பட்டது. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (திருவனந்தபுரம்,கேரளா) வேந்தராகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் இருந்து வருகிறார். மேலும் பல இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் போன்ற சிறப்பு நிலைகளில் உள்ளார்.

பொருளடக்கம்

வாழ்க்கை வரலாறு

அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூடப் பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.
உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழக அளவில் உள்ள அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.கள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். அல்லது வரவழைக்கப் பட்டுள்ளனர். ஆனால் அப்துல் கலாம் ஏன் வரவில்லை? அப்துல் கலாம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டாரா? போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
அப்துல் கலாம் புறக்கணிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்து வருவது குறித்து மாநாட்டுப் பொறுப்பாளர்கள் விளக்கம் அளிக்க மறுத்து வருகின்றனர்.
அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றால் மீடியாக்கள் அவரைச் சுற்றியே வட்டமிடும். பொதுமக்களும் அவரைக் காணவே விரும்புவார்கள். குழந்தைகளும் மாணவர்களும் அவரோடு பேசப் போட்டி போடுவார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட நிகழ்ச்சி நடத்துபவர்கள் விரும்பவில்லை. எனவேதான் அப்துல்கலாமை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

விருதுகள்

இந்திய அரசு இவருக்கு வழங்கி உயரிய விருதுகள் : பத்மா பூஷன் (1981),பத்மா விபூஷன் (1990),பாரத் ரத்னா (1997).

எழுதியுள்ள நூல்கள்

  • அக்னிச் சிறகுகள்
  • எழுச்சித் தீபங்கள்
  • இந்தியா 2020
  • இந்தியா 2010
  • அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மு. க. ஸ்டாலின் 1953 ஆம் ஆண்டு கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். உருசியாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாக ஸ்டாலின் [2] [3]எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி[3].

மு.க. ஸ்டாலின்

முன்னாள் துணை முதலமைச்சர், தமிழ்நாடு

தொகுதி கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)
அரசியல் கட்சி தி.மு.க
கட்சி பொறுப்பு பொருளாளர்

பிறப்பு மார்ச்சு 1, 1953 (அகவை 59)
சென்னை, தமிழ்நாடு
கல்வி இளங்கலைமானி அரசியல்
வாழ்க்கைத்
துணை
துர்கா
பிள்ளைகள் உதய்,செந்து சாப்
இருப்பிடம் சென்னை
இணையதளம் www.mkstalin.net
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.[1]. இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அண்ணன் மு.க. அழகிரியும், தங்கை கனிமொழியும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.

பொருளடக்கம்

வாழ்க்கைக் குறிப்பு

1953 ஆம் ஆண்டு கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். உருசியாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாக ஸ்டாலின் [2] [3]எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி[3].

பள்ளிப்பருவம்

ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது. இதனால் சென்னை சேத்துபட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.

அரசியல் வாழ்க்கை

தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர்.

மாநிலச் செயலாளர்

இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது [2]. 1980 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

சிறை செல்லல்

ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 இல் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்[2].

இளைஞரணி தலைமையகம்

திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்[2].

தேர்தலில் தோல்வி

ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்[2]. அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

மேயர்

இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.[2].

மேம்பாலங்கள்

மேயராக இருந்து ஸ்டாலின் சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டினார். அவர் சாதனைகளில் சில:
  • பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன[4].
மேயராக இருந்தபொழுது கட்டப்பட்ட 9 பாலங்கள்[4]
வ.எண் அமைந்துள்ள இடம் பாலம்
1 பீட்டர்ஸ் சாலை கான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு
2 பீட்டர்ஸ் சாலை வெஸ்ட்கார்ட் சந்திப்பு
3 பாந்தியன் சாலை காசா மேஜர் சந்திப்பு
4 புரசைவாக்கம் செடுஞ்சாலை பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பு
5 டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை ராயப்பேட்டை செடுஞ்சாலை
6 டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை டி டி கே சாலை
7 டி டி கே சாலை சந்திப்பு சி பி ராமசாமி சாலை சந்திப்பு
8 சர்தார் பட்டேல் சாலை லாட்டீஸ் பாலம் சாலை சந்திப்பு
9 சர்தார் பட்டேல் சாலை காந்தி மண்டபம் சாலை சந்திப்பு
2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்தல்

மாநகராட்சிப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும், மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரத்தை பற்றி நன்மதிப்பை உருவாக்கவும் முக்கிய நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டார்.[5].
ஏழைக்குழந்தைகளின் வசதிக்காக, தனியார் பள்ளிகளில் மட்டுமே இவ்வசதி ஏற்படுத்தபட்டு இருந்த நிலை மாறி மழலையர் பள்ளிகளை மாநகராட்சிகளில் இளம்நிலை (எல்.கே.ஜி), மேல்நிலை (யூ.கே.ஜி), விளையாட்டுத்துறை என 30 வகுப்புகளுடன், 132 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்டன[5].

மேயர் பதவி பறிப்பு

2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா[2][6][7]. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்[2].

அமைச்சர்

மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்[2].

அரசியல் வளர்ச்சி

சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.
அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் சூறாவளியை விட, திமுகவுக்குள்ளேயே வைகோ என்ற புயலை சமாளிக்கத்தான் ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் அதீத வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என அப்போது அவருடைய ஆதரவாளர்களால் கருதப்பட்டது[2]. ஆனாலும் கால ஒட்டத்தில், வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னர்தான் ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்றும் கூடக் கூறப்படுகின்றது.
இருப்பினும் சொந்த சகோதரரான மு.க. அழகிரி இன்னொரு சவாலாக உருவெடுக்கவே மீண்டும் திமுகவுக்குள் அடுத்த தலைவர் யார் என்ற குழப்பம்[2] நிலவி வருகிறது.

பொழுதுபோக்கு

ஸ்டாலின் மரப்பந்தாட்டம் , கணிணி விளையாட்டு, பூபந்தாட்டம், சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர். தந்தையைப் போலவே மரப்பந்தாட்டம் [2] மீது ஆர்வம் கொண்டவர்.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு", மே 29, 2008.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 தட்ஸ் தமிழ் மு. க ஸ்டாலின்பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-06-2009
  3. 3.0 3.1 மு.க.ஸ்டாலின் அறிமுகம்-பெயரின் முக்கியத்துவம்பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
  4. 4.0 4.1 மேயராக இருந்த பொழுது ஆற்றிய சாதனைகள்-மு.க.ஸ்டாலின் அலுவலக இணையத்தளம்பார்த்து பரணிடப்பட்ட நாள்-12-06-2009
  5. 5.0 5.1 மு.க. ஸ்டாலின் மேயராக இருந்த பொழுது மாநகராட்சி பள்ளிகளுக்காக ஆற்றிய சாதனைகள் பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
  6. டைம்ஸ் ஆப் இந்தியா-மேயர் பதவி ஸ்டாலின் கைநழுவி அதிமுகவிற்கு போனதுபார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
  7. ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து நீக்கியதின் விளைவாக அதிமுக வெற்றிபெற்றது - இந்து நாளிதழ்பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
பகுப்புகள்:

கருணாநிதி, (ஆங்கிலம்: M. Karunanidhi) இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.



முத்துவேல் கருணாநிதி

முதல்வர் அலுவலகத்தில் மு. கருணாநிதி

பதவியில்
மே 13, 2006 – மே 16, 2011
முன்னவர் ஜெ. ஜெயலலிதா
பின்வந்தவர் ஜெ. ஜெயலலிதா
தொகுதி சேப்பாக்கம்

பதவியில்
13 மே 1996 – 13 மே 2001
முன்னவர் ஜெ. ஜெயலலிதா
பின்வந்தவர் ஓ. பன்னீர்செல்வம்
தொகுதி சேப்பாக்கம்

பதவியில்
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
முன்னவர் ஜானகி இராமச்சந்திரன்
பின்வந்தவர் ஜெ. ஜெயலலிதா
தொகுதி துறைமுகம்

பதவியில்
15 மார்ச்சு 1971 – 31 ஜனவரி 1976
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதி சைதாப்பேட்டை

பதவியில்
10 பேப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971
முன்னவர் இரா. நெடுஞ்செழியன்
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதி சைதாப்பேட்டை
அரசியல் கட்சி தி.மு.க.
கட்சி பொறுப்பு தலைவர்

பிறப்பு சூன் 3, 1924 (அகவை 88)
திருக்குவளை, தமிழ்நாடு
வாழ்க்கைத்
துணை
பத்மாவதி
தயாளு
ராசாத்தி
பிள்ளைகள் முத்து
அழகிரி
இசுடாலின்
செல்வி
தமிழரசு
கனிமொழி
இருப்பிடம் சென்னை
சமயம் இறைமறுப்பு[1]
ஜூன் 14 இன் படியான தகவல், 2009
மூலம்: தமிழ்நாடு அரசு
முத்துவேல் கருணாநிதி, (ஆங்கிலம்: M. Karunanidhi) இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொருளடக்கம்

இளமைப்பருவம்

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924ல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் திருமதி அஞ்சுகம் அம்மையார் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி.
கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருபெற்றது.

அரசியல்

மாணவர் மன்றம்

கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.

முரசொலி நாளிதழ்

இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

முதன்மைக் கட்டுரை: இந்தி எதிர்ப்புப் போராட்டம்
1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: மொழிப்போராட்டம்”.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்கள்து கட்சியின் அரசியல் கொள்கை..“ மேலும்”இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்து செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கபட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்றும் அவர் கூறினார். அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யபட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர்

போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆண்டு தொகுதி வாக்கு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்கு வாக்கு வேறுபாடு
1957 குளித்தலை 22785 கே. எ. தர்மலிங்கம் காங்கிரசு 14489 8296
1962 தஞ்சாவூர் 32145 பரிசுத்த நாடார் காங்கிரசு 30217 1928
1967 சைதாப்பேட்டை 53401 எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு 32919 20482
1971 சைதாப்பேட்டை 63334 என். காமலிங்கம் காங்கிரசு 50823 12511
1977 அண்ணா நகர் 43076 ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 16438 16438
1980 அண்ணா நகர் 51290 எச். வி. ஹண்டே அதிமுக 50591 699
1989 துறைமுகம் 41632 கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 9641 31991
1991 துறைமுகம் 30932 கே. சுப்பு காங்கிரசு 30042 890
1996 சேப்பாக்கம் 46097 S. S. நெல்லை கண்ணன் காங்கிரசு 10313 35784
2001 சேப்பாக்கம் 29836 தாமோதரன் காங்கிரசு 25002 4834
2006 சேப்பாக்கம் 34188 தாவுத் மியாகான் சுயேச்சை 25662 8526
2011 திருவாரூர் 109014 எம்.இராசேந்திரன் அதிமுக 58765 50249

பொருளாளர்

1957 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.
1967 இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர்.
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இது தவிர்த்து, தமிழகத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
  • 1969-1971 --கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
  • 1971-1976—இரண்டாவது முறையாக
  • 1989-1991 --எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
  • 1996-2001—நான்காம் முறை ஆட்சி
  • 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி

விமர்சனங்கள்

1972 விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.[1],[2] [3] 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சிஅமல்படுத்தப்பட்டது. சர்க்காரியா கமிசன் [4] [5] 1973 ல் மிசா 1975 ஜூன் மாதத்தில் நெருக்கடிக்கால அறிவிப்பை அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அமல்படுத்தியதால் 1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள் காங்கிரஸ் (I) ஐ கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது.
தொடக்க காலத்தில் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது..
2008 - 2009 இல் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டனர். தமிழரும் தமிழுமே உயிர், மூச்சு, பேச்சு என்று முழங்கி அரசியல் வாழ்க்கை நடத்தி வந்த கருணாநிதி, ராஜீவ் காந்தி படுகொலை ஈழ விடுதலைப் போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது. இக்கொடுமையைக் கண்டு கை பிசைந்து நிற்பதை விட தம்மால் வேறொன்றும் செய்ய முடியாதென்று பகிரங்கமாகவே கூறிக்கொண்டார்.[2]. இதன் விளைவாக அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

குடும்பம்

மனைவிகள்
  • பத்மாவதி
  • ராசாத்தி அம்மாள்
  • தயாளு அம்மாள்
மகள்கள்
மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் (2007), (2009)-2011 தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார் .மு. க. அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கருணாநிதி புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். இவர் அரசியல் பணிகளையும், எழுத்துபணிகளையும் ஓய்வின்றி செய்ய முடிவதற்கு நாளும் யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையே காரணமாகக் கூறப்படுகிறது.
இவரின் தன் வரலாற்று நூல் நெஞ்சுக்கு நீதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.

திரைப்படப் பணி

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

மேலும் பல...

மேடை நாடகங்கள்

  • சிலப்பதிகாரம்
  • மணிமகுடம்
  • ஒரே ரத்தம்
  • பழனியப்பன்
  • தூக்கு மேடை
  • காகிதப்பூ
  • நானே அறிவாளி
  • வெள்ளிக்கிழமை
  • உதயசூரியன்
மேலும் பல...

புத்தகங்கள்

மேலும் பல...

புகைப்படக் காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்