நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும்
டென்மார்க், ஸ்வீடன், நோர்வே மற்றும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த
விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.
இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற டென்மார்க் அரசர் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது.
அந்த மன்னர் பெயர் ஹெரால்ட் புளுடூத். அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.
இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், நோர்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார்.
பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில்
அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன்
என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.
986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில்
மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது, கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது,
நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார். -
tech.lankasri

No comments:
Post a Comment
THANK YOU