Thursday 19 June 2014

life style is very easy


நம் வீட்டில் செய்யும் அன்றாட அலுவல்களை விரைவாக செய்திட இந்த வீடியோவைப் பாருங்க



https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_jfL9_1xixU


50 கோடி வாடிக்கையாளர்களைத் தாண்டியது வாட்ஸ்ஆப் whatsapp


50 கோடி வாடிக்கையாளர்களைத் தாண்டியது வாட்ஸ்ஆப்
whatsapp-logo
குறுந்தகவல் அனுப்பப் பயன்படும் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், இந்தச் செயலி பிரபலமடைந்து வருவது இதற்கு முக்கியக் காரணமாகும்.
“உங்கள் அனைவருக்கு நன்றி. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயனர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ரஷியா ஆகிய நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் 70 கோடி புகைப்படங்களும் 10 கோடி வீடியோக்களும் பகிரப்படுகின்றன.
மார்ச் மாதம் வரை வாட்ஸ் ஆப் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது. இதில் 32 கோடி பயனர்கள் தினமும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களாக இருந்தனர்.
இந்தியாவில் வாட்ஸ் ஆப் செயல்பாடு சிறப்பாக, சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலும் உள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் பலர், உயிர்களைக் காப்பாற்ற வாட்ஸ் ஆப் மூலம் இ.சி.ஜி. மற்றும் இருதய நோயாளியின் புகைபடங்களை அனுப்புகின்றனர். இதனால் தாமதமின்றி சிகிச்சை அளிக்க முடிகிறது” இவ்வாறு அந்த நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2009-ஆம் ஆண்டு உக்ரைனைச் சேர்ந்த ஜான் கூம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரியான் ஆக்டன் ஆகிய இருவரால் தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் நிறுவனத்தை, கடந்த பிப்ரவரி மாதம் 19 பில்லியன் டாலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு

சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு
ser
லண்டன்: உலகிலேயே முதல் முறையாக சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான எக்ஸ்ரே ஒளியை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 50 மில்லியன் ஆண்டு பழமையான தாவர படிமங்களையும் துல்லியமாக படம் பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் டயமண்ட் லைட் சோர்ஸ் நிறுவனம் இணைந்து அதிக பிரகாசமுள்ள ஒளி பற்றி ஆய்வு செய்தன. அதில் சூரிய ஒளியை விட பல மடங்கு அதிக பிரகாசமாக ஒளிரும் எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்துள்ளன. 

இது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய படிமங்களையும் இந்த எக்ஸ்ரே ஒளிக்கதிர்கள் மூலம் துல்லியமாக ஆராய முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாவரத்துக்கும் அதே இனத்தை சேர்ந்த தற்போதைய தாவரத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், ரசாயன குணங்கள், அவற்றால் ஏற்படும் மாறுபாடுகள் குறித்து இந்த புதிய எக்ஸ்ரே கதிர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானி பில் மேனிங் கூறுகிறார்.

மென்பொருள் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் எல்லாத வித பைல்களையும் எளிதில் PDF ஆக மாற்றுவது எப்படி ? pdf converter

நாம் உருவாக்கிய ஆக்கங்களை PDF ஆக மாற்றுவதற்க நமக்கு சில நேரங்களில் சிரமமாக இருக்கும். உதாரணமாக word அல்லாத மற்ற பைல்களை நாம் PDF ஆக மாற்றவிரும்பினால் அதற்குரிய மென்பொருளை தேட வேண்டியிருக்கும். பிறகு வேறு ஒரு format file ஐ PDF ஆக மாற்றி வேறு ஒரு மென்பொருள் தேட வேண்டியிருக்கும்.
PDF convert  வகையை சார்ந்த மென்பொருளை (software) பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும். ஆனால் PDF writer என்ற அடிப்படையிலான மென்பொருளை (software) பயன்படுத்தினால் மேற்கண்ட பிரச்சனை இருக்காது.
இதில் எந்த டாக்குமெண்டையும் எளிதில் PDF ஆக மாற்றிக் கொள்ளலாம். அது என்ன format ஆக இருந்தாலும் சரி.
தாங்கள் விரும்பும் File ஐ PDF ஆக மாற்ற எந்த தனிப்பட்ட மென்பொருளையும் நீங்கள் திறக்கத் தேவையில்லை. மேலும் இன்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்த தேவையில்லை.
நாம் வேலை செய்து கொண்டிருக்கும் Application னிலேயே அந்த file ஐ PDF ஆக மாற்றிக் கொள்ளலாம்.
உதாரணமாக adobe photoshop ல் நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தால் அந்த file ஐ adobe photoshop லியே PDF ஆக மாற்றிக் கொள்ளலாம். (அதில் அந்த வசதி இல்லை என்றாலும்) இதற்கென தனியாக எ்நத மென்பொளுக்கோ இணையளத்திற்கு செல்லத் தேவையில்லை. (இதை தான் நாம் தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம்)
இது தான் PDF writer வகையை சார்ந்த மென்பொருளின் சிறப்பு அம்சம். இந்த வகையை சார்ந்த CUtePDF writer என்ற மென்பொருளை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து கொண்டால் இந்த வசதியை தாங்கள் பெற முடியும். இந்த மென்பொருள் தானாக உங்கள் கணிணியில் CutePD Writer என்ற பெயரில் ஒரு Printer உருவாக்கும். (உங்கள் பிரிண்ட்ரை இன்ஸ்டால் செய்தால் வருமே அது போன்று)
பிறகு நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் application ல் Print ஐ கொடுத்து உங்கள் பிரண்ட்ருக்கு பதிலாக PDF Printer தேர்வு செய்தால் போதும் உங்கள் document PDF ஆக மாறி உங்கள் கணிணியில் save ஆகவிடும்.
PDF writer
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் . பின் வரும் இணைப்பில் உள்ள இது இயங்குவதற்குத் தேவையான இரண்டு மென்பொருளை உங்கள் கணிணில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
http://www.cutepdf.com/download/CuteWriter.exe
http://www.cutepdf.com/download/converter.exe
இனிமேல் எந்த பைலாக இருந்தாலும் அந்த File ஐ PDF ஆக மாற்ற நீங்கள் சிரமப்படத் தேவையில்…
GURU

உலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் – எந்த சாதணமும் தேவையில்லை! chennai 3d

Google Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.  எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்கு Street View என்று சொல்லப்படும் 360 degree 3d image  View வசதி இதில் இல்லை.
360 degree 3d image View என்பது ஒரு இடத்தை நாம் நேரில் சென்று பார்த்தால் நமது கண்களுக்கு எப்படி தெரியுமோ அதே போன்று நமக்கு தேவைப்படும் இடத்தை அந்த இடத்திற்கு செல்லாமலே தத்ரூபமாக பார்த்துக் கொள்ளலாம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்.
LA
google map ன் lose angels நகரின் வீதி ஒன்றின் street view
மேற்க கண்ட படம் கேமராவிலோ போனிலோ எடுத்த புகைப்படம் அல்லது. 360 degree 3d image View ஆகும். எந்த புறம் வேண்டுமானாலும் நீங்கள் திரும்பி பார்க்கலாம். நேரில் பார்ப்பது போன்று இருக்கும்.  நீங்கள் விரும்பிய இடம் வரை பார்த்துக் கொண்டே செல்லலாம்.
இதே போன்று இந்தியாவிற்கு இல்லையே என பலரும் ஏங்கி வந்தனர். அந்த குறையை தற்போது வேனோபோ என்ற நிறுவனம் (wonobo a dvanced geospatial technology company) நிவர்த்தி செய்துள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களின் Street View map ஐ நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென பிரத்யேகமாக எந்த சாதணமும் தேவையில்லை.
வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள உங்கள் வீட்டை யாருக்காவது காட்ட வேண்டும் எனில் இதில் எளிதில் காண்பித்துக் கொள்ளலா்ம.
தங்கள் வீட்டின் தோற்றத்தை பார்க்க விரும்புபவர்கள் இதில் பார்த்துக் கொள்ளலாம். சந்து போந்து வழி தெரியவில்லை எனில் இதை பார்த்து வழியை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
சென்னை தி நகர் சரவணா ஸ்டோரின் street view ஐ பார்க் வேண்டும் எனில் பின் வரும் இணையதளத்திற்கு சென்று saravana store t nagar என search செய்து பார்த்துக் கொள்ளலாம்
http://www.wonobo.com/
மேற்கண்ட இணையதளத்தில் தாங்கள் பார்க்க விரும்பும் இடத்தின் முகவரை கொடுத்து search செய்து நீங்கள் விரும்பும் இடத்தின் street view map பார்த்துக் கொள்ளலாம்.
சென்னையின் hot city ஆன தி நகர் street view map ஐ உதாரணமாக பாருங்கள்
saravana store
இது புகைப்படம் அல்ல. 360 degree 3d image View ஆகும். கணிணியில் இருந்தவாறே வலது இடது புறம் திரும்பி பார்த்துக் கொள்ளலாம். மேலே கீழே பார்த்துக் கொள்ளலாம். விரும்பிய அடி தூரத்திற்கு முன் பின் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் கணிணி முன் அமர்ந்து கொண்டே நீங்கள் அந்த பகுதியில் நடந்து செல்லும் அனுபவத்தை பெறலாம்.
இந்தியாவின் எந்த பகுதியையாவது நீங்கள் சுத்தி பார்க்க  வேண்டும் எனில் கணிணி முன் அமர்ந்து கொண்டே  இதில் சுத்தி பார்த்துக் கொள்ளலாம்.
உங்கள் வீட்டு முகவரியை கொடுத்து உங்கள் வீட்டை நீங்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை பெறலாம். இதை பார்த்து விட்டு நிச்சயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
சென்னையின் ஒரு குடியிருப்பு பகுதியின் street view map பாருங்கள்
chennai
நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே இந்தியாவின் எந்த பகுதியையும் * நேரில் பார்ப்பது போன்று பார்த்துக் கொள்ளலாம்
இந்த பதிவை ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கு  தெரியப்படுத்துங்கள்.
தற்சமயம் சென்னை உட்பட இந்தியாவின் பின் வரும் முக்கிய நகரங்களின் street view map இதில் இடம் பெற்றுள்ளது.
Mumbai
Ahmedabad
Bangalore
Chennai
Delhi
Hyderabad
Jaipur
Kolkata
Surat
Pune
Agra
Goa
Bhopal
Chandigarh
Patna
Amritsar
இப்பொழுதே உங்கள் வீட்டை பாருங்கள் : www.wonobo.com
இன்னும் பல்வேறு நகரங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றது..
முகவரி கொடுத்து உங்கள் வீடு நேரடியாக வரவில்லை எனில் உங்கள் வீடு இருக்கும் இடத்தின் பிரதான பகுதியின் பெயரை கொடுத்து விட்டு பின்னர் அப்படியே உங்கள் வீட்டிற்கு நடந்து செல்வது போன்று சென்று உங்கள் வீட்டை பாருங்கள்.
About Wonobo: internet service built by Genesys International Corporation, an advanced geospatial technology company based out of India. Close to 2,000 of the folks at Genesys have worked on complex mapping projects worldwide. Among them are rocket scientists, imaging experts, urban planners, social scientists and, importantly, Internet buffs – all with a common passion to use mapping technology to better people’s lives. We strongly believed that we needed to do this for our country and its citizens. So we went ahead and did it! : -)

சிம் கார்டில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி ?

பின் வரும் மென்பொருளை பயன்படுத்தி சிம் card ல் அழிந்து போன தகவல்களை மீண்டும் பெற முடியும். SIM Card ல் நாம் சேமித்து வைத்திருந்த Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை இந்த மென்பொருள் மூலம் Recover செய்து கொள்ளலாம்.
இந்த SIM Card SMS Recovery மென்பொருளின் Trial Version ஐ இலவசமாக Download செய்து கொள்ளலாம்.
நமக்கு தெரிமாயமல் குழந்தைகள் யாரிடமாவது பேசி அதை சிம் கார்டில் இருந்து அழித்து விட்டால் இந்த மென்பொருள் மூலம் குழந்தைகள் யாா யாரிடம் பேசியுள்ளது என்ன என்ன SMS அனுப்பியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Sim-card
பின் வரும் வசதிகள் இந்த மென்பொருளில் இடம் பெற்றுள்ளது.
Features:
* SIM card SMS recovery software retrieves all missed and corrupted inbox, outbox text messages, draft items with date and time details from your SIM card.
* Mobile phone SIM card messages rescue tool recovers SIM cards internal stored information ( ICC-ID, IMSI numbers, service provider name, SDN numbers) from any GSM SIM cards.
* SIM card backup utility provide support to all major Windows OS versions and PC/SC or phoenix type USB SIM card readers.
* GSM simcard data recovery application provides GUI interface with complete install and uninstall support and manual help for message recovery.
பின் வரும் இணைப்பில் இதன் Trial Verison ஐ இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்
Click Here to Downlaod SIM Card Recovery


                  Guru

தொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது Track செய்வது எப்படி ? mobile track

இந்த நவீன யுகத்தில் அனைவரும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்ககளை பயன்படுத்துகின்றனர்.
அனைவரின் கைகளிலும் தற்போது புகுந்து விளையாடுவது Samsung ஸ்மார்ட் போன்கள் தான்.
உங்கள் விலை உயர்ந்த சாம்சங்  தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலையை மிகவும் பாதிக்கும். அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும்  தொலைந்து போதுவதும் பெரும் இழப்பை தங்களுக்கு ஏற்படுத்தும்.
வரு முன் காப்போம்
Samsung Smart Phone கள் தொலைந்து போனால் அதை எப்படி கண்டு பிடித்தப்து அதை எவ்வாறு இருக்கும் இடத்திலிருந்தே இயக்குவது உள்ள விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.
இதற்கு உங்கள் தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள்  தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும்.
அதற்கு பின்வரும் ஆப்சனை உங்கள் போனில் பயன்படுத்தவும்.
remote-setting
1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.
2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்கு Samsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.
3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும்.
அவ்வளவு தான் இப்போது உங்கள் தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை , பிள்ளைகள் பயன்படுத்தினாலோ அது இருக்கும் இடம், பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல் (call Logs) மற்றும் ஏராளமான விசயங்களை Track செய்ய செய்து கொள்ளலாம்.
http://findmymobile.samsung.com/login.do
மேற்கண்ட இணையதள முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account User Name மற்றும் Password ஐ கொடுக்கவும்.
அதில் கீழ்ண்டவாறு காண்பிக்கப்படும்  அங்கே உங்கள் தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும்.
samsung-track-mobile
இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும்
1. Locate My Mobile – இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொலைபேசியின் தற்போதைய இருக்கும் இடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்தது என்ற விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம்
where is my mobile
2.Lock My Mobile- இதன் மூலம் கணிணி மூலமே உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும்.
3.Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும்.
4.Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் receive ஆன அழைப்புகளின் தகவல்களை பெறலாம்
5. Wipe My Mobile- நீங்கள் செமித்து வைத்த தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் வேலைகளை செய்து கொள்ளலாம்.
சாம்சங் மொபைல் வைத்திருப்பவர்கள் இனி கவலைப்டத் தேவையில்லை. மொபைல் தொலைந்து போனால் எளிதில் கண்டு பிடித்து விடலாம்.
சில நேரங்களில் வீட்டில் எங்காவது மொபைலை வைத்து விட்டும் தேடுவோம் அந்த நேரம் பார்த்து மொபைல் சைலண்டில் இருக்கும், கண்டுபிடிக்க முடியாது. இனி அந்த கவலையும் வேண்டாம். கணிணி மூலம் சைலண்ட் மோடை எடுத்து விட்டு எளிதில் கண்டு பிடித்து விடலாம்.
குழந்தைகள் மற்றும் மனைவியிடம் செல்போன கொடுத்து விட்டு அவர்கள் எங்க இருக்கின்றார்கள். என்பதை நாம் எளிதில் காண்காணித்துக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்தை கண்ணாகிக் இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும்.
                                     Guru