Friday 1 February 2013

படிக்காத மேதை




தன்னலம் கருதாப் பொதுதொண்டால்
தரணி செழிக்க பாடு பட்டார்
தான் கற்றது சிறிதே ஆனாலும்
ஏணியாய் பலரை ஏற்றி விட்டார்

ஏழை எளியோர் கற்றிடவே
இலவசக் கல்வி அறிவித்தார்
கல்வி கற்கும் மாணவரின்
பசியைப் போக்க உணவளித்தார்

கட்டிய அணைகள் பலவாகும்
கிட்டிய பலனோ நிறைவாகும்
பேச்சும் மூச்சும் தேச நலன்
சிந்தையும் செயலும் மக்கள் நலன்

அனுபவ அறிவே ஆயுதமாம்
எளிமையும் திறமையும் கூர்வாளாம்
படிக்காத மேதையின் போர்வாளாம்

No comments:

Post a Comment

THANK YOU