Friday 4 January 2013

மோனலிசா



பொன் நகை அணியாமல்
புன்னகை பூக்கும் பூவே...

லியானர்டோ தூரிகையால் எழுதிய
அழியாத ஓவியமே


காவிய ஓவியமே
ஓவியக் காவியமே...

ஞாலம் தோறும் காட்சிப் பாவையாய்... 
காலங்கள் பல சென்றும்
காட்சிப் பொருளாய்...

விரியாத வலையென
வீழ்த்த துடிக்கும் - உன் 
இதழ் இரண்டால்
வீழத் தவிக்கும் - என் 
கண்கள் இரண்டு...


சதிராடும் உன் இளமை
குதிபோடும் என் மனதை 
துதி பாடும் என் கவிதை 

மௌனம் மொழி பேசும் 
யவன விழியாள் - என்றும்  
புரியாத புதிராய் 
புன்னகை பூக்கும் 
புதிரான மோனலிசாவே....

No comments:

Post a Comment

THANK YOU