Sunday 29 July 2012

பொன்மொழிகள் :


பொன்மொழிகள் :குரு








நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப் படாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.

- அடோல்ப் ஹிட்லர்.


கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
-A.P.J. அப்துல் கலாம்

நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப் படாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
- அடோல்ப் ஹிட்லர்.


உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும்
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.
- அலெக்சாண்டர்

உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட
வேதனைப்படுத்த கூடாது.
- சார்லி சாப்ளின் .

தண்டனை கொடுப்பதற்கு
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட
செய்யாதே.
- அன்னை தெரேசா.


யாருக்காகவும் உன்னை
மாற்றி கொள்ளாதே.
ஒருவேளை மாற நினைத்தால்,
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
நீ மாற வேண்டி வரும்.
- கவியரசு கண்ணதாசன்

உன் வேதனை பலரை
சிரிக்க வைக்கலாம்.
ஆனால்,
உன் சிரிப்பு ஒருவரைக் கூட
வேதனைப்படுத்த கூடாது.
- சார்லி சாப்ளின்.


என்றும் நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது.
- கார்ல் மார்க்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
- விவேகானந்தர்


நமது குழந்தை நிலையை எண்ணி இப்போது சிரிப்பது போல, இன்னும், ஐம்பது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதைய நிலையை எண்ணிச் சிரிப்போம்.
- விவேகானந்தர்


வாழ்க்கையின் சிந்தனை மிகுந்த நேரங்களையும், நோய்களையும் வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அவை எல்லாம் உருமாறி விடக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள்.
- ஸ்ரீ அன்னை


எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம் ஏழையாக இருக்க முடியாது.
- ஹிட்ச்சாக்


ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
- சார்லஸ்


இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன்


எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்புகொண்டவர்கள், நண்பர்கள்,
தன்னை எப்போதும் அலட்சியப்படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.
- பகவத் கீதை


எவரும் வேண்டும் என்றே தவறு செய்வதில்லை. எது உண்மையிலேயே சரி என்பதை அறியாது அவர் மனம் கருதுவதைச் செய்கிறார்.
- சாக்கரட்டீஸ்

No comments:

Post a Comment

THANK YOU