Sunday 15 July 2012

சிவலிங்கம், குழலூதும் கிருஷ்ணர் படங்களை வீட்டில் வழிபடக்கூடாதாமே ஏன்?



 * சிவலிங்கம், குழலூதும் கிருஷ்ணர் படங்களை வீட்டில் வழிபடக்கூடாதாமே ஏன்?

யார் சொன்னது? சொன்னவரிடம் காரணம் கேட்கவில்லையா? சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்வதற்கும், குழலூதும் கிருஷ்ணரை வழிபடுவதற்கும் பலபிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நீங்கள் புண்ணியம் செய்திருப்பதால் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். செய்யக்கூடாது என்று சொன்னவர் கடுகளவு புண்ணியம் கூட செய்தவராகத் தெரியவில்லை.

* வடக்கு நோக்கி அமர்ந்து சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

கிழக்குநோக்கி அமர்ந்து சுபநிகழ்ச்சி செய்வது முதல்தரம். மேற்கு இரண்டாம்தரம். வடக்கு மூன்றாம் தரம். பூஜை காரியங்களுக்கு மட்டும் ஏற்புடையது. தெற்கு கூடாது. 


கோயிலை விட்டு வெளியேறும்போது விநாயகரை வழிபட்டால் அருளை திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்வதில் உண்மை உண்டா?

உண்மையா என்ற கேட்பதைப் பார்க்கும்போது நீங்கள் நம்பவில்லை என்று தெரிகிறது. சிறுபிள்ளைகளிடம் இது போலக் கூறினால் கூட சிரிப்பார்கள். உங்களிடம் இதைச் சொன்னவரிடம் ஒரு சந்தேகம் கேளுங்கள். தரிசனம் கொடுக்காமல் கதவை மூடிக் கொண்டு விடுவாரா என்று. கொடுப்பதற்குத் தான் தெய்வம் இருக்கிறது. திருப்பி எடுத்துக் கொள்வதற்காக அல்ல.

* ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் திருமண ஏற்பாடு செய்யலாமா?

ஏழரைச்சனி என்றாலே கஷ்டம் என்று பயமுறுத்துகிறார்கள். சனிபகவான் இக்காலகட்டத்தில் சில நன்மைகளையும் செய்வார். திருமண வயது வந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தால் அவர் மகிழ்கிறார்.



** வாழ்வில் வெற்றி பெற முயற்சித்தால் போதுமா? அல்லது கடவுளின் அருள் தேவையா?

"முயற்சிதிருவினையாக்கும்' என்பது முதுமொழி. திருவினை என்ற சொல்லில் உள்ள "திரு' என்ற சொல்லை சற்று சிந்தித்துப் பார்த்தால் போதும். இறைவனுக்கு "திருவுடையான்' என்று பெயர். வெற்றி, மகிழ்ச்சி, மங்களம், கவுரவம், செல்வம், அழகு என பலபொருள் தரும் ஒரு சொல் "திரு'. முயற்சி செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எழுவது நம் அறிவில் தான். அறிவுக்கு அப்படிப்பட்ட ஆற்றலை விலை கொடுத்து வாங்க முடியுமா? அல்லது வேறு யாராவது தர முடியுமா? இறையருள் இருப்பவர்களுக்குத்தான் அறிவாற்றல் அதிகமாக இருக்கும். தொடர்ந்து இறை வழிபாட்டுடன் நம் முயற்சிகளை செய்து கொண்டிருந்தால் வினை எனப்படும் முயற்சியின் பலன் "திரு' எனும் அடைவுடன் சேர்ந்து விடும். உங்கள் முயற்சி இறையருளால் திருவினையாகிறது.

No comments:

Post a Comment

THANK YOU