Thursday 27 December 2012

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........


பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் !
அது பொம்பளைக்கும் தெரியும்!
அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் !
அது யாருக்குத்தான் தெரியும்....!



சமீபத்தில் நண்பர்கள் தளங்களுக்கு எங்கு சென்றாலும் ”பெண்மனசு” பெண்மை பெண் பாடகர்களின் பாடல்கள், இப்படி எல்லாம் ஒரே பெண்களின் புகழாகவும் தாய்க்குலங்களின் அன்பாகவும், சகோதரிகளின் பாசமாகவும், தொடர் பதிவாக  பெண்களுக்கு சிறப்பு சேர்த்துகொண்டிருக்கிறார்கள், நல்ல விசயம் இதில் நாமும் பங்கெடுத்துகொள்ளலாம் என்று ஒரு சிறு முயற்சி இந்த பதிவு, 

இந்த பாடல் ஒரு ஏழைக்குடும்பத்தின் நிலையையும் அவர்களின் வாழ்க்கை கஷ்டங்களையும், பள்ளிக்கூட விடுதியில் தங்கி படிக்கும் ஒரு ஏழை மகள் தன் அம்மாவுக்கு கடிதம் எழுதி தன் கஷ்டங்களை உணர்வுகள் மூலம் பதிவு செய்கின்ற பாடல், இந்த பாடல் நாட்டுப்புறப் பாடலைச் சேர்ந்தது, உணர்வுகளுடன் பாடியவர் நாட்டுப்புறப் பாடகி  மதுரை சின்னப்பொன்னு குமார் இவர்தான் பின்னாளில் திரையுலக்கு வந்து நாக்கமுக்க என்ற பக்திப் பாடலைப் பாடி இந்த ஒரே பாடலின் மூலம் உலகப் புகழ்பெற்றவர். திரையுலக்கு இவரின் அறிமுகம் சந்திரமுகியில் வரும் வாழ்த்துறேன் வாழ்த்துறேன் என்ற பாடல்தான் முதல் பாடல்.

ஏழை மகளின் கண்ணீர் கடித வடிவில் பாடலாக:
  ANBULLAM - OK!!s by rrsimbu
(இந்த பாடலை ஒருமுறையாவது கேளுங்கள் ஒரு ஏழைப் பெண்ணின் உணர்வுகள் வலிகளுடன் வேதனையும் சேர்ந்து நம் மனதை கரைய வைத்துவிடும்)

பாடலை தறவிரக்கம் செய்ய
இங்கு செல்லவும்

கடிதம் வடிவில் பாடல் வரிகள் :

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன்  உருப்படியா படிக்கிறேன்
யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்!

பள்ளிக்கூடம் சேர்க்கனுன்னு பாத்திரத்த வித்தீங்களே!
எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
அம்மா எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுங்க!
புஸ்தகநோட்டு வாங்க பணம் அனுப்புறேன்னு சொன்னீங்களே!
பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா....
அம்மா பாத்திரம் தேய்ச்ச வீட்டுல இன்னும் பணம் குடுக்கலையா...

புஸ்தகநோட்டு வாங்கலைன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்!
வாங்கிக் கொடுத்த பேனாவும் உடைஞ்சு இரவல் வாங்கி எழுதுறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......
கிழிஞ்ச சட்டைக்காரியின்னு கிண்டலாத்தான் பேசுறாங்க
ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்
அம்மா ஏம்மனசு தாங்காம நான் அழுகிறேன்

தோட்டக்காரய்யா வீட்டுல பழைய சட்டை தருவதா சொன்னீங்களே!
வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
நீங்க வரும்போது மறக்காம வாங்கி வாங்கம்மா!
விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்.......

கீழாண்ட செவத்தோரம் மறந்தும் போகாதம்மா
கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
அம்மா கருநாகம் வெடுப்புலதான் இருக்குது
மேலாண்ட கூரைமேல சாக்கு கிழிச்சுப் போடுங்கம்மா
மேற்கத்தி மழை அடிச்சுதுன்னா இருக்கும் இடம் நனைஞ்சுடும்

பாத்திரம் தேய்ச்ச கையெல்லாம் காயமுன்னு சொன்னாங்க!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்தும் போட்டுக்கம்மா!
நெஞ்சு வேதனை எனக்கு நீ மஞ்சப் பத்துவும் போட்டுக்கம்மா!
இப்படிக்கு
உங்கள் அன்பு மகள்
கோடீஸ்வரி

(எழுத்துப் பிழைகள் இருந்தால் மாணவனை மன்னித்து உரிமையோடு சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்)

டிஸ்கி: இதை யார் வேண்டுமென்றாலும் தொடர் பதிவா எழுதலாம், காசா பணமா நீங்க பாட்டுக்கு எழுதுங்க நாங்க வந்து படிக்கிறோம்!

No comments:

Post a Comment

THANK YOU