Saturday 18 August 2012

வானம் ஏன் நீலம் ?


வானம் ஏன் நீலம் ? 

ஏன்? எதற்கு ? என்ற கேள்விகள் எழும் போது தான் மனித அறிவும் மூட நம்பிக்கைகள் பலவற்றிலிருந்தும் விடுபடும் . ஏன் ஆப்பிள் மேலே போகாமல் கீழே வருகிறது என நியூட்டன் மனதிற்குள் கேட்ட கேள்விகள் தான் அன்று புவியீர்ப்பு விசை என்று இருப்பதை உலகிற்கு உணர்த்தியது .

பல அடிப்படை கேள்விகள் மனித மனகளுக்குள் இருந்து வருவதே இல்லை ..அவற்றில் ஒன்று தான் இது . ஏன் வானம் நீலம் ? 

இதுவரை காலமும் இறைவன் வானையும் மண்ணையும் படைத்தான் என்றனர். மண் இருக்கிறது ஆனால் வானம் என்று ஒன்றே இல்லை என்பது சிலர் சிந்தனைகளுக்கு மட்டும் தான் எட்டிய விடயம் .. அது பற்றி கொஞ்சம் பார்ப்போம் .


சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது .இதனை வானவில்லில் அவதானிக்கலாம் . 

வாயுமண்டலத்தில்  ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென்,21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு .   அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது  . 

 ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை . சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது .  



கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன . குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது . உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன . அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது  . 


நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன .
அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது . வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள்,மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல்  ஆனதே தவிர 
அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை ..

No comments:

Post a Comment

THANK YOU