Monday 27 August 2012

அலெக்ஸாண்டர். !!!

மகா சக்ரவர்த்தி அலெக்ஸாண்டர் தன் கடைசிக் 

காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்களை 

வைத்துக்கொண்டு , " இறந்த பிறகு பெரிய மரப் 

பெட்டியில் என் உடலை வைத்து மூடி , ஆணி 

அறைந்து , கல்லறைக்குத் தூக்கிச் செவீர்கள் . 

அப்போது என் இரண்டு கைகளை மட்டும் 

மூடாமல் வெளியில் தெரியும்படி வைத்து நீங்கள் 

தூக்கிச் செல்லவேண்டும் ! " என்று 

கேட்டுக்கொண்டான் . " அப்படியே செய்கிறோம் ! 

" என்றார்கள் வீரர்கள் .

அப்போது ஒரு வீரன் , " மன்னிக்கணும் , கையை

 மட்டும் ஏன் வெளியில் வைக்கச் சொல்றீங்க ? " 

என்று கேட்டான் ." நான் இந்த உலகில் 

எத்தனையோ போர்களை நடத்தினேன் ; 

எத்தனையோ வெற்றிகளைக் கண்டேன் . 

புகழையும் , கீர்த்தியையும் , பொன்னையும் , 

பொருளையும் சம்பாதித்தேன் . கடைசியில் இந்த 

உலகத்தை விட்டுச் செல்லும்போது , நான் 

ஒன்றையுமே எடுத்துக்கொண்டு போகவில்லை 

என்பது இந்த உலகத்திற்குத் தெரியவேண்டும் ! " என்றான் அலெக்ஸாண்டர். .' 


முடிசார்ந்த மன்னரும் மற்று முள்ளோரும் 

முடிவில் பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவார் 

...'--- திருக்குறளார் முனுசாமி . ஆனந்தவிகடன் . 

01 - 04 - 2009 .

No comments:

Post a Comment

THANK YOU