Tuesday 28 August 2012

சிந்தனைக்கு...சில


  • சிந்தனைக்கு...
  • வணக்கம் நண்பர்களே, ஒரு புதிய முயற்சியாக நான் படித்து கற்றுக்கொண்ட, நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பொன்மொழிகள்,தத்துவங்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டுகின்ற சின்ன சின்ன தகவல்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்..இதோ எனது முதல் முயற்சியாக:

  • தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.

  • ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.

  • பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.

  • வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விசயம் பொறுமை.

  • எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.

  • நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே...தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.

  • அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.

  • சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.

  • உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.

  • நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.

  • மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.

  • அன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை.

  • கடுமையான வார்த்தைகளை கையாள்வது, எப்போதும் பலவீனத்தின் அடையாளம்.

  • பலம் பொருந்திய உடலைவிட, சிந்திக்கக்கூடிய நல்ல மூளையே சிறந்தது.

  • எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.

  • தோல்வி என்ற படி இருந்தால், அங்கே நிச்சயம் வெற்றி என்ற மாடி இருக்கும்.

  • பிறருடைய முதுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.

  • சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.

  • அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.

  1. வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.
######################################################


No comments:

Post a Comment

THANK YOU