Sunday 27 May 2012

உருத்திராட்சம் - அளவும், வகைகளும்!

உருத்திராட்ச மரத்தின் பழத்தில் இருந்து இந்த கொட்டைகளை பிரித்தெடுத்து கழுவி உலரவைத்து அவற்றின் அளவைப் பொறுத்து தனித் தனி பயன்பாட்டுக்கென பிரித்தெடுக்கின்றனர். இந்த கொட்டைகளின் அளவு தட்பவெப்ப நிலை, மரத்தின்வகை, வயது மற்றும் பழத்தின் முதிர்ச்சியைப் பொறுத்து மாறு படுகிறது. பொதுவில் பார்ப்பதற்கு மங்கலாய் கருமை அல்லது செம்மையேறிய பழுப்பு நிறத்தில் உருத்திராட்ச மணிகள் காணப் படுகின்றன.

உருத்திராட்ச மணியின் வெளிப்புற பரப்பானது ஒழுங்கற்ற ஆனால் உறுதியான மேடு பள்ளங்களுடனும், பிளவுகளுடனும் காணப் படுகிறது. இந்த கொட்டைகளை உற்று கவனித்தால் மேலிருந்து கீழாக அழுத்தமான கோடு போன்ற பிளவுகள் இருக்கும். இந்த பிளவுகளையே முகங்கள் என்கின்றனர். இந்த உருத்திராட்ச மணிகளின் வளர்ச்சி மற்றும் திரட்சியைப் பொறுத்து இவற்றில் பிளவுகள் அல்லது முகங்கள் அமைகின்றன. ஒரு முகத்தில் இருந்து 21 முகம் வரையிலான உருத்திராட்ச மணிகள் கிடைக்கின்றன. பொதுவில் 95 விழுக்காடு காய்கள் ஐந்து அல்லது ஆறு முகம் கொண்டவைகளாகவே இருக்கின்றன.

இந்த காய்களில் உள்ள முகங்களின் அழுத்தம் மற்றும் இடைவெளியைப் பொறுத்தே இந்த உருத்திராட்ச மணிகளின் எடை அமைகிறது. நெருக்கமான இடைவெளியை உடைய காய்கள் பாரமானதாகவும், அகன்ற ஆழமான இடைவெளியுள்ள காய்கள் பாரம் இல்லாமல் லேசானதாகவும் இருக்கும். இத்தகைய காய்கள் மட்டும் நீரில் மிதக்கும்.

மிக அபூர்வமாய் இரண்டு காய்கள் ஒன்றோடு ஒன்று இனைந்தது முகங்கள் ஏதும் இல்லதது போலிருக்குமாம். இந்த வகை மணிகளை “கவுரி சங்கர்”என்கின்றனர். ஒரு முகம் மட்டும் அமைந்துள்ள காய்கள் தோற்றத்தில் முழுமையாக விளைச்சலை அடையாத காய்களைப் போலிருக்கும். ஏகமுகம், இரண்டு முகம், மூன்று முகமுடைய உருத்திராட்ச மணிகளும் அபூர்வமானதாகவும், சக்தி உடையவனாகவும் கருதப் படுகிறது. இந்த கருத்தாக்கங்கள் யாவும் நம்பிக்கையின் பாற்பட்டதே.

உருத்திராட்ச காய்களின் அளவை வைத்து மூன்று தரமாக பிரிக்கின்றனர். நெல்லிக்காய் அளவு உருத்திராட்சம், இலந்தைப் பழ அளவு உருத்திராட்சம், கடலை அளவு உருத்திராட்சம் என மூன்றாக பொதுமைப் படுத்தப் பட்டிருக்கிறது. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சங்கள் பூரண பலனையும், இலந்தைப் பழ அளவிளான காய்கள் மத்திம பலனையும், கடலை அளவுள்ளவை அதம பலனையும் தருமென கூறப் பட்டிருக்கிறது.

பொதுவில் ருத்திராட்சங்கள் மாலைகளாய் கோர்த்தே பயன் படுத்தப் படுகிறது. நூல் கயிறு முதல் உலோக கம்பிகள் வரை மாலைகளாய் கோர்க்க பயன் படுத்தப் படுகிறது. இப்படி மாலைகளாய் கோர்ப்பதில் பல தனித்துவமான முறைகள் கையாளப் படுகின்றது. நான்கு வகையிலான எண்ணிக்கையில் இந்த மாலைகள் கோர்க்கப் படுகின்றன. 1, 27, 54, 108 என்கிற எண்ணிக்கையிலான மாலைகளே பயன் பாட்டில் இருக்கிறது. இப்படி மாலையாக கோர்க்கும் போது ஒரே வகையான முகங்களைக் கொண்ட உருத்திராட்சங்களையே பயன் படுத்திட வேண்டுமாம். ஆனால் வர்த்தக ரீதியாக மாலை கட்டுவோர் இவற்றை கவனத்தில் கொள்வதில்லை.

இப்படி மாலையாக கட்டும் போது ஒரு உருத்திராட்சம் எக்காரணத்தைக் கொண்டும் அடுத்த உருத்திராட்சத்தை தொட்டுக் கொண்டிருக்க கூடாதாம். SIVA SIVA      GURU...

No comments:

Post a Comment

THANK YOU