Tuesday 29 May 2012

நம் நாடு வல்லரசாகுமா? எப்படி?இந்தபுத்தகங்களே ஆதாரம்

நமது நாடு வல்லரசாகுமா? எப்படி?

கீழ்க்கண்ட புத்தகங்கள் எந்த அரசியல் கலப்புமின்றி நமது இந்துயா முழுக்க பயணம் செய்து ஏராளமாக சர்வே செய்து எழுதப்பட்டுள்ளன. நிச்சயமாக நமது நாடு வலிமைமிக்கதாக மாறும்.அதற்கான அடையாளங்களே இந்த புத்தகம் முழுக்க நிரம்பியுள்ளன.
சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்:தனி மனிதனின் தனித்தன்மை உயர்த்தப்பட்டால், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் தனித்தன்மை நிச்சயம் உயரும்.இவ்வாறு ஏராளமான நிறுவனங்களின் தனித்தன்மை உயர்ந்தால் அந்த நிறுவனங்களின் நாடு உயரும் என்றார்.(எனக்குத் தெரிந்து இந்த 2009 இல் ஒரு 45 வயது மனிதர் இருக்கிறார்.அவரது படிப்பு அந்தக்கால 3 ஆம் வகுப்பு.அவர் சுமார் 1000 செல் போன் மற்றும் போன் எண்களை தப்பின்றி கூறுகிறார்.வெறும் 200 ரூபாயில் துவங்கிய அவரது நிறுவனம் இன்று ஒரு நிமிடத்துக்கு ரூ.5000 சம்பாதித்துக்கொண்டிருக்கிறது).இந்த புத்தகங்களை ஆடிட்டர் குருமூர்த்தி என்பவர் எழுதியுள்ளார்.இவர் சென்னையில் உள்ளார்.பல வருடங்களாக இவர் தினமணி, துக்ளக்,சுதேசிச் செய்தி இவற்றில் பல பொருளாதார விழிப்புணர்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.இவரது கட்டுரைகளை வாசிப்போர் நமது நாட்டின் மீது இன்னும் அதிக நேசத்தை கொட்டுவர்.நமது அரசியலவாதிகளின் வடிகட்டின அயோக்கியத்தனத்தினை உணர்ந்து கொள்ளுவர்.
1.பொருளாதாரம் புதிரல்ல! விலை ரூ.25/-
இந்த புத்தகம் பொருளாதாரத்துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் தருகிறது.பல கடினமான பொருளாதாரக் கோட்பாடுகளை எளிமையாகப் புரிய வைக்கிறது.
2.பெண்மையைப் போற்றுதும்,பெண்மையைப் போற்றுதும் விலை ரூ.40/-
நமது நாட்டில் பெண்களைப் போற்றி மதிக்கும் தன்மையைக் குறித்தும்,பெண்ணுரிமை இயக்கங்கள் பெண்கள் முன்னேறுகிறார்களா அல்லது சீரழிக்கிறார்களா(பம்மல் கே சம்மந்தம் படம் ஞாபகத்திற்கு வருகிறதா?)என்பதைப்பற்றியும் விளக்குகிறது.வெளிநாடுகளில் விடுதலை பெற்ற பெண்கள்(பெண் விடுதலை பெற்றவர்கள்)படும் அவதிகளைப்பற்றியும் விளக்குகிறது.
3.நம்பிக்கை விதைக்கும் நல்லுள்ளங்கள் விலை ரூ.25/-
நாட்டில் நல்லவர்களே இல்லையே என புலம்புகிறீர்களா?இந்த நூல் இப்படியெல்லாம் இந்தக்காலத்தில் வாழ்ந்து வருகிறார்களா? என ஆச்சரியப்படும் மனிதர்களை நீங்கள் சந்திக்கலாம்.இவர்களல்லவா தன்னலமற்ற ஆத்மாக்கள்!!!
4.சீட்டுக்கட்டு மாளிகை விலை ரூ.25/-
அமெரிக்காவின் வண்டவாளங்களை புட்டு புட்டு வைக்கிறது.அந்த நாட்டின் பொருளாதார கலாச்சார(அவர்களுக்கு ஏது கலாச்சாரம்?) சீரழிவுகளை விவரிக்கிறது.
5.விவசாயத்தை விட்டு ஓடும் விவசாயிகள் விலை ரூ.20/-
இப்புத்தகம் விவசாயிகளைப் பற்றியும் அவர்கள் படும் அவஸ்தைகளைப்பற்றியும் ஆழமாக அலசுகிறது.
6.நம்மை நாமே எப்போது உணர்வோம் விலை ரூ.25/-
நம்மை நாம் ஏன் தாழ்வாக நினைக்கிறோம்? எப்படி இந்த சிந்தனை நாடு முழுக்கப்பரவியது.
நமது புராதனப்பெருமைகள் என்ன? ஏன் நாம் நம்மை உயர்வாக நினைக்கவேண்டும்? (இந்த இரு கேள்விகள் தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூ தோன்றக்காரணமே)என்பதை விரிவாக கூறியுள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள்
7.ஆயிரம் உண்டிங்கு ஜாதி! விலை ரூ.25/-
ஜாதி அமைப்புகளின் வலிமை பற்றியும் அவை நமது இந்துயாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உந்துசக்தியாக இருக்கின்றன என்பதைப்பற்றியும் ஆழமாக அலசுகின்றன.
(நல்ல வேளை அரசியல்வாதிகள் இதில் மூக்கை நுழைக்கவில்லை)
8.வான சாஸ்திரம் விலை ரூ.தெரியவில்லை.எழுதியவர் டாக்டர் எம்.எல்.ராஜா.
நமது பாரதநாட்டின் வானசாஸ்திர ஆராய்ச்சியில் நீண்ட நெடிய இடையீடற்ற பாரம்பரியம் கொண்ட இந்துயா நாட்டின் கூறுகளை எடுத்துக்கூறுகிறது.

இந்த 8 புத்தகங்களும் கிடைக்குமிடங்கள்:
சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
K-75 14 வது தெரு
அண்ணாநகர் கிழக்கு
சென்னை-102.
போன்:94431 40930

சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
401,துருவதாரா அபார்ட்மெண்ட்ஸ்
241,டாக்டர் ராஜேந்திரபிரசாத் ரோடு
டாடாபாட்,கோயம்புத்தூர்-12.
போன்:94863 12732

இணையதளம்:www.swadeshitn.org

No comments:

Post a Comment

THANK YOU