Monday 28 May 2012

கவனச்சிதறலைத் தடுக்கும் ஓம்சிவசிவஓம் ...


தமிழ்நாட்டில் 7.5 கோடி தமிழர்கள் வாழ்ந்துவருகின்றனர்.நாம் அனைவரும் வாழையடி வாழையாக சித்தர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களே! இருந்தும்,நமது தவறுகளே நம்மை கஷ்டங்களாக,வறுமையாக,நோயாக,எதிரியாக,துயரமாக,காமரீதியான அவமானங்களாக கர்மவினைவடிவில் நம்மை இயக்குகின்றன.

கலியுகத்தில் அன்னதானமும்,தினசரி மந்திர ஜபமும் மட்டுமே கர்மவினைகளைத் தீர்க்கும்.வேறு எதுவும் தீர்க்காது.உதாரணமாக,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் சுமார் 5 ஆண்டுகளுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாக வைத்துக்கொள்வோம்.5 ஆம் ஆண்டின் முடிவில் , சதுரகிரிக்கோ,திருஅண்ணாமலைக்கோ,பர்வதமலை(வேலூருக்கும் திருஅண்ணாமலைக்கும் நடுவில் இருப்பது)க்கோ செல்லும் சந்தர்ப்பம் உண்டாகும்.அப்படி செல்லும்போது,இரவு நேரத்தில் சித்தர்களில் யாராவது ஒருவரை சந்திக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;அப்படி நாம் சந்திக்கும் சித்தர் நமது பாட்டனாருக்கு பாட்டனார் என்பதை நாம் அறிய மாட்டோம்;ஆனால்,நாம் ஐந்து வருடங்களில் சுமார் 50,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்திருப்போம் இல்லையா? அதன் விளைவாக நமது முற்பிறவி கர்மவினைகள் அழிந்துபோயிருக்கும்;அதன் மூலமாக,நமது மூதாதையரில் இருக்கும் சித்தரை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கும்.அப்படி சந்தித்தது முதல், நமக்கு செல்வச்செழிப்பும்,மன நிம்மதியும்,குடும்ப ஒற்றுமையும்,அனைத்து யோகங்களும் நம்மை வந்து சேரும்.

அதே சமயம்,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்கிய ஆரம்ப காலங்களில் முதல் மூன்று மாதங்கள் வரையிலும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாத அளவிற்கு கர்மாக்கள் தடுக்கத்தான் செய்யும்;சில நாட்களில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும்.இதற்காக  மனதில் குற்ற உணர்ச்சியுடன் வருத்தப்படத் தேவையில்லை;மூன்றாவது மாதத்தின் முடிவிலிருந்து நாம் யார்? என்ற கேள்விக்கான விடையை நெருங்கியிருப்போம்.மேலும், நமது லட்சியத்தை நேர்வழியில் அடைவதற்கான சிந்தனை படிப்படியாக நமது மனதில் உருவாகும்.

கடவுள் நம்பிக்கையில்லாதவர்களில் 99 பேர்கள் இந்து நாத்திகவாதிகளே! அவர்களை ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்து ஆராய்ச்சி செய்ய நான்

No comments:

Post a Comment

THANK YOU