Saturday 20 July 2013

குருவின் அச்சமின்மை குரு

* அன்புணர்வு வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் போதாது. சுயநலமற்ற சேவையால் அதை வெளிப்படுத்த வேண்டும்.

* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும்.

* உடலுக்கு உணவு, உயிருக்கு பிரார்த்தனை.

* உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.

* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதை கடவுள் பார்த்துக் கொள்வார்.

* நல்ல நண்பனைப் பெற விரும்பினால் நீங்களும் நல்ல நண்பனாக இருங்கள்.

* நம் மனதில் எழும் எண்ணம் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நாம் உணர வேண்டும்.

* ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்குமரம் ஏற வேண்டியிருந்தாலும் அஞ்சாமல் சொல்லுங்கள்.

* அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.
- காந்திஜி

No comments:

Post a Comment

THANK YOU