Monday 22 July 2013

நான் யார் வீரனா என்னை கேட்டால் நான் கோழை இல்லை

தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச் செல்வான் ஒருவன் — அவன்தான்
நாடகத்தை ஆட வைக்கும் இறைவன்.
> கண்ணதாசன்.
————————————————————————–
பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள்
ஓய்வுகொடுத்துத் தானும் மூன்று நாள்
பட்டினியாயிருப்பான்!
————————————————————————–
அண்டை வீட்டாருக்கு காற்று வராதபடி உங்கள் சுவரை
அவர்கள் அனுமதியில்லாமல் உயரமாக எழுப்பாதீர்கள்
>நபிகள் நாயகம் (ஸல்)
————————————————————————-
தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை
உண்டாக்காது!
———————————————————————–
உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன்
மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்!
—————————————————————————-
அறிவே தந்தை, மனநிறைவே தாய்.
உண்மையே உடன் பிறந்த சகோதரன் என ஏற்றுக்கொண்ட
எவரும் எவருக்காகவும் அஞ்சாமல் வெற்றி பெறுவர்
>சீக்கியப் பழமொழி

1. புத்திசாலி ,பெண்களிடம் ”நீ பேசாமல் இருக்கும் போதுதான் அழகாக இருக்கிறாய்”என்பான்
2. குடிப்பதை நிறுத்த
கல்யாணத்திற்கு முன் – சோகமாக இருக்கும் போது குடி
கல்யாணத்திற்கு பின் – சந்தோசமாக இருக்கும் போது குடி
3. நண்பர்களை நேசி அவர்கள் சகோதரிகளை அல்ல….. சகோதரியை நேசி அவர்கள் நண்பர்களை அல்ல…
4. எல்லா மனிதனையும் தவறு செய்யும் போது வாழ்த்துவது கல்யாணத்தின் போதுதான்

No comments:

Post a Comment

THANK YOU