Saturday 20 July 2013

குருவின் பாதை

* பணத்தை விட அறிவு உயர்ந்தது என்று அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால், அறிவை விட ஒழுக்கமே சிறந்தது.


* ஒருவன் கற்ற கல்வியை தராசின் ஒரு தட்டிலும், மனத்தூய்மை, உண்மையை இரண்டாவது தட்டிலும் வைத்துப் பார்த்தால், இரண்டாவது தட்டே தாழ்ந்து நிற்கும்.


* ஒழுக்கமில்லாமல் கற்கும் கல்வி, தீமை செய்வதற்கான தகுதியை ஒருவருக்கு வழங்கி விடும்.


* சட்டத்தால் மட்டுமே யாரையும் திருத்தி விட முடியாது. முழுமையான மனமாற்றமே திருந்துவதற்கான ஒரே வழி.


* சந்தேகப்படுவது கண்ணியமான பண்பு அல்ல. ஏமாற்றுகிறவர்கள் நீண்டநாள் உலகில் நிலைத்திருக்க முடியாது.

* குறிக்கோள் இல்லாத வாழ்வு, நங்கூரம் இல்லாத கப்பலைப் போன்றது. ஒழுக்கம் இல்லாத மனிதனால் எந்த ஒரு குறிக்கோளையும் எட்ட முடியாது.


* கடவுளிடம் அளவற்ற நம்பிக்கையும், பயபக்தியும் இருக்கும் ஒருவனே வாழ்வில் சபதம் மேற்கொள்ள தகுதி படைத்தவன்.
- காந்திஜி

No comments:

Post a Comment

THANK YOU