Friday 29 March 2013

நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை !

முட்களில் மோதிக்
கிழியாதவனுக்குப்
பூக்களைத் தடவும்
தகுதி கிடையாது !

மகிழ்ச்சியாய்ச் சிரி

கவலைகளைப் பிய்த்துக்
காற்று மண்டலத்திற்கு
அப்பால் வீசு !

எதைக் கண்டும்

பிரமிக்காதே
பிரமிப்பைப்போல் ஒரு
பின்னடைவே கிடையாது !

தோல்வி என்பது

சிந்திக்கத் தெரியாதவனின்
சித்தாந்தம் !

நிலாவைத் தொட்டது

மூன்று தோல்விகளுக்குப்
பிறகுதான் !

நீ எழுந்தால் ஒரு

எட்டு வந்து பார்க்காதவன்
நீ விழுந்தால் விழுந்து
விழுந்து விசாரிப்பான் கவனி !

இளைஞனே

இரைப்பையையும்
நம்பிக்கையையும்
காலியாக விடாதே !

நடக்குமா என்ற

கேள்வி-
உன் நம்பிக்கைக் கோபுரத்தின்
அத்திவாரத்தில்
விழுந்த கடப்பாறை !

உலகை உலுக்கி உலுக்கி

எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில் ஒரு
தூசுப்படலமாக இருந்தவன்தான் !

No comments:

Post a Comment

THANK YOU