Monday 1 April 2013

நான் இறக்கின்ற போது.... குரு


னது கண்களை, 
சூரிய உதயத்தையே காணாதவருக்கு கொடுங்கள்;

னது இதயத்தை, 
இதயத்தின் வலியை உணர்ந்தவருக்கு கொடுங்கள்;

னது குருதியை, 
கொடும் விபத்தில் காயம்பட்ட இளைஞனுக்கு கொடுங்கள்;

னது சிறுநீரகங்கள், 
மற்றொருவர் உடலிலிருந்து கழிவை வெளியேற்றட்டும்;

னது எலும்புகள், 
முடமான குழந்தையை நடக்கச் செய்வதற்கு உதவட்டும்;

ன்னில் என்ன மிச்சமிருக்கிறதோ அதை எரியுங்கள்; 
அந்தச் சாம்பலை மலர்ச்செடி வளர காற்றில் தூவுங்கள்;

ன்னுடையது எதையாவது நீங்கள் புதைக்க வேண்டியிருந்தால், 
அது எனது தவறுகளாகவும், நான் எனது சக மனிதனுக்கு எதிராக செய்த குற்றங்களாகவும் இருக்கட்டும்;

னது பாவங்களை பிசாசுகளுக்கு கொடுங்கள்;

னது ஆன்மாவை ஆண்டவனுக்கு கொடுங்கள்;

நீங்கள் என்னை நினைக்க விளைந்தால், 
யாருக்குத் தேவையோ அவருக்காக கனிவான செயல் ஒன்றைச் செய்யுங்கள் அல்லது சொல் ஒன்றைக் கூறுங்கள். அதுவே என்னை நினைப்பதாகும்.

நான் கேட்டதை எல்லாம் நீங்கள் செய்வீர்களானால், 
நான் என்றும் வாழ்ந்திருப்பேன் !


- நானி ஏ. பல்கிவாலா.
சட்ட மேதை.

No comments:

Post a Comment

THANK YOU