Monday 1 April 2013

ஆசிட் வீச்சுக்கும் முட்டை வீச்சுக்கும் என்ன சம்பந்தம் ?


இரவில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கும் போது, அவற்றை நிறுத்தி வழிப்பறியில் ஈடுபட நினைக்கும் கொள்ளையர்கள் தற்போது இந்த முட்டை வீச்சு நுணுக்கத்தை கையாளுகின்றனர் என்று  சர்வதேச குற்றவியல் விழிப்புணர்வு தகவல் ஒன்று கூறுகிறது. அதாவது, கார் கண்ணடி மீது முட்டையை சரமாரியாக வீசுவது. முட்டை உடைந்து அதன் வெள்ளைக்கரு, மஞ்சள் கரு கார் கண்ணாடி மீது பாவும்.


அச்சமயத்தில் பின்வரும் சில அனிச்சை செயல்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்:

1. காரை நிறுத்தக் கூடாது. தொடர்ந்து அந்த இடத்தில இருந்து ஓட்டிச் சென்று விட வேண்டும். காரை நிறுத்தி சோதனை செய்ய நினைத்தால் வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களுக்கு ஆளாவது நிச்சயம். 

2. அடுத்து செய்யக்கூடாத ஒரு முக்கிய செயல் என்னவென்றால், கார் முகப்பு கண்ணாடி மீது பரவிய முட்டை கருக்களை நீக்க, காரை ஓட்டிக் கொண்டே கார் பனெட் மீது பொருத்தப்பட்டிருக்கும் நீர் தெளிப்பான் வாயிலாக நீர் பீச்சக் கூடாது. முட்டைக் கரு மீது நீர் பட்டவுடன் ஒட்டிக் கொள்ளும் தன்மை இன்னும் அதிகரித்து விடும். பசபசப்பு இன்னும் கூடி விடும். இது முகப்பு கண்ணாடி வாயிலாக பாதையை பார்க்கும் திறனில் 92 விழுக்காட்டை குறைத்து  விடும். 

3. அது போல், கார் வைப்பர்  மூலம் அக்கருக்களை துடைக்க முற்படக் கூடாது. கண்ணாடியில் ஓரிடத்தில் விழுந்த முட்டைக் கருவை நாமே கண்ணாடி  முழுக்க தடவி நமது பார்வையை மறைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். 

பாதை தெரியாது போனால் காரை நிச்சயம் நிறுத்த வேண்டி வரும். இதுதானே அச்சமூக விரோதிகளின் எண்ணம். அதற்கு நமது மேற்படி அனிச்சை செயல்கள் துணை போய் விடக்கூடாது ! நாமே குற்றச் செயல்களுக்கு பலியாகி விடக் கூடாது.

எனவே எச்சரிக்கை ! 
\                                                                                                      --- ------  ----  
----குரு

No comments:

Post a Comment

THANK YOU