Wednesday 8 May 2013

தன்னம்பிக்கை கவிதைகள்

நான் ஒன்றும் வசதியானவன் அல்ல ..
மாற்று உடையின்றி மாறி மாறி ...
ஒரே உடையை மாறி மாறி ...
போடும் வசதியான குடும்பம் ...
கிழிந்த காட்சட்டையை ...
ஒழித்து ஒழித்து போட்டவன் நான் ...
என் அருமை தோழிகள் முன்னே வரும் போது ..
கிழிந்த பின்புறத்தை மறைக்க ...
ஸ்ரைல் மன்னன் போல் ...
சுவரோடு நிற்பேன் ...
கிழிந்தது என் ஆடைகளே அன்றி ..
தன்னம்பிக்கையல்ல ...!

அம்மாவுக்கு பொய் சொன்னதை தவிர ...
வீட்டு வேலைசெய்யாத போது ஆசிரியருக்கு ...
பொய் சொன்னதை தவிர ...!!!
நண்பர்களுக்கு காதலை மறைத்ததை தவிர ..
காதலிக்கு இடையிடையே ...
பொய் சொன்னதை தவிர ...!!!
நான் யாருக்குமே பொய் சொல்லேலங்க...
உண்மையா என்னை நம்புங்க ...
இப்படித்தான் அரிச்சந்திரனாக வாழுகிறேன் ..!!!!!

நீ சொல்லாவிட்டால் என்ன ...?
நான் அருகில் வரும் போது ஓடி ஒழிக்கிறாய் ..
கூட்டமாய் வரும் போது ஆட்கழுக்குள் மறைகிறாய்
தூரத்தில் நின்று திரும்பிப்பார்க்கிறாய் ....
முன்பைவிட இப்போது தனியாய் வருகிறாய் ..
அடிக்கடி இப்போ திரும்பி பார்க்கிறாய் ..
நீ என்ன செய்தாலும் நான் உன்னை ...
விரும்புகிறேன் என்று சொல்லமாட்டேன் ..!!!
இன்னும் இன்னும் தவிக்க
வேண்டும் நீயும் நானும்..!!!

No comments:

Post a Comment

THANK YOU